ஏழுமலையான் பூஜை; நீதிமன்றம் கேள்வி

2 mins read
a3fc9c04-479f-4067-a6cc-fb93412fa37f
-

திரு­மலை: திருப்­பதி ஏழு­மலை யானுக்கு ஆகம முறைப்­படி பூஜை நடக்­கி­றதா என்று உச்ச நீதி­மன்றம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

பொது­நல வழக்கு ஒன்றை விசா­ர­ணைக்கு எடுத்­துக்கொண்ட நீதி­மன்­றம், இது குறித்து விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று திருப்­பதி நிர்­வா­கத்­துக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோயி­லில் அபி­ஷே­கம், தோமாலை சேவை, ஆர்­ஜித பிரம்­மோற்­ச­வம், ஏகாந்த உற்­ச­வங்­கள் ஆகம சாஸ்­தி­ரங்­க­ளின்­படி நடப்­ப­தில்லை என­வும் தவ­றான முறை­யில் மகா லகு தரி­ச­னத்­திற்கு தேவஸ்­தா­னம் பக்­தர்­களை அனு­ம­தித்து வரு­வ­தா­க­வும் உற்­சவ மூர்த்­தி­க­ளை தவ­றான முறையில் கையாளப்படுவதா கவும் ஸ்ரீவாரி தாதா என்ற பக்­தர் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் பொது­நல வழக்கு தொடுத்­தி­ருந்­த­தாக 'இந்து தமிழ் திசை' தெரி­வித்­தது.

இந்த வழக்கு புதன்­கி­ழமை அன்று விசா­ர­ணைக்கு வந்­தது.

உச்ச நீதி­மன்றத் தலைமை நீதி­பதி என்.வி. ரமணா, சூர்­ய­காந்த், ஹிமா கோஹ்லி ஆகி­யோர் அடங்­கிய அமர்வு வழக்கை விசா­ரித்­தது.

அப்­போது பேசிய தலைமை நீதி­பதி என்.வி. ரமணா, ''நானும் திருப்­பதி ஏழு­ம­லை­யா­னின் பக்­தர்­களில் ஒரு­வனே. அவ­ரின் மகி­மையை இவ்­வு­ல­கம் அறி­யும். பூஜை­களில் தவறு இருந்­தால் அவர் மன்­னிக்க மாட்­டார்,'' என்று தெலுங்­கில் கூறி­னார். இதை­ய­டுத்து ஆகம முறைப்­படி பூஜை­கள் நடக்­கி­றதா என்­பது குறித்து வரும் அக்­டோ­பர் 6ஆம் தேதி விளக்­கம் அளிக்­கும்­படி திருப்­பதி தேவஸ்­தா­னத்­துக்கு அவர் உத்­த­ர­விட்­டார்.

இதற்கு முன்பு இந்த வழக்கு ஆந்­திர உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. ஆனால் ஆகம விதி, பூஜை முறை­களில் நீதி­மன்றம் தலை­யிட முடி­யாது என்று கூறி வழக்குத் தள்­ளு­படி செய்யப்பட்டது.

இந்த நிலை­யில் அதே பக்­தர் தற்­போது உச்ச நீதி­மன்­றத்­தில் மேல் முறை­யீடு செய்­துள்­ளார்.