18 வயதைக் கடந்தவர்களில் 69% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

1 mins read
519b8e07-e40e-44b3-aca6-df87f03ad654
நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் தங்கள் குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனைக்காக காத்திருக்கும் பெண்கள்.படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் இது­வரை 69 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மேலும், மொத்த மக்­கள் தொகை­யில் சுமார் 25 விழுக்­காட்­டி­ன­ருக்கு, அதா­வது 237 மில்­லி­யன் பேருக்கு இரண்டு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டுள்­ள­தாக அறிக்கை ஒன்­றில் அந்த அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

கிரா­மப்­பு­றங்­களில் உள்ள தடுப்­பூசி மையங்­களில் 64.1 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் நகர்ப்­புற மையங்­களில் 35 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள சுகா­தார அமைச்சு கிரா­மப்­பு­றம், நகர்ப்­பு­றம் எனப் பிரிக்­கப்­ப­டாத தடுப்­பூசி மையங்­களில் 0.88 விழுக்­காடு தடுப்­பூசி போடப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் தின­மும் சரா­சரி­யாக 1.5 மில்­லி­யன் மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­கின்­றன.

இதற்­கி­டையே இந்­தி­யா­வின் தடுப்­பூசித் திட்­டத்­தில் மூன்­றா­வ­தாக ஸைடஸ் கெடிலா நிறு­வ­னத்­தின் 'ஸைகோவ்-டி' என்ற புதிய கொரோனா தடுப்பு மருந்து சேர்க்­கப்­ப­டு­கிறது.

இத்­த­க­வலை மத்­திய சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் ராஜேஷ் பூஷண் தெரி­வித்­துள்­ளார்.

தற்­போது கோவேக்­சின், கோவி­ஷீல்ட் ஆகிய இரு தடுப்­பூ­சி­கள் இந்­தி­யா­வின் தடுப்­பூசி திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

மூன்­றா­வ­தாக இணைய உள்ள 'ஸைகோவ்-டி' ஊசி­யில்லா தடுப்பு மருந்­தா­கும்.

இதன் விலை குறித்து தயா­ரிப்பு நிறு­வ­னத்­தி­டம் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­வ­தா­க­வும் மற்ற இரு தடுப்­பூ­சி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்­தத் தடுப்பு மருந்­தின் விலை மாறு­பட்­ட­தாக இருக்­கும் என்­றும் ராஜேஷ் பூஷண் கூறி­யுள்­ளார்.