ஏர் இந்தியா விற்பனை: மத்திய அரசு விளக்கம்

புது­டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடன் சிக்கலில் மூழ்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியான தகவலை அதன் முதலீடு, பொது சொத்து மேலாண்மைத் துறை மறுத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் அத்துறையின் செயலாளர் டுவிட்டர் பதிவு ஒன்றில் தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும், ஏர் இந்தியா விற்பனை குறித்து எடுக்கப்படும் முடிவு குறித்து ஊடகங்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என அத்துறை கூறியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்குவதில் பெரிய நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!