நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டம்: உச்ச நீதிமன்றம் கேள்வி

2 mins read
852aaab3-1524-4046-9754-c3f16835c67b
-

புது­டெல்லி: தேசிய நெடுஞ்­சா­லை­களை மறித்து போராட்­டம் நடத்­தும் விவ­சா­யி­கள் மீது ஏன் இன்­னும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என மத்­திய அர­சுக்கு உச்ச நீதி­மன்­றம் கேள்வி எழுப்பி உள்­ளது.

விவ­சா­யி­க­ளின் இந்­தச் செயல்­பாடு அர­சி­யல் சாச­னத்­திற்கு எதி­ரா­னது என்­றும் நீதி­ப­தி­கள் தெரி­வித்­த­னர்.

புதிய வேளாண் சட்­டங்­களை மத்­திய அரசு திரும்­பப்­பெற வலி­யு­றுத்தி கடந்த ஓராண்டு கால­மாக ஏரா­ள­மான விவ­சா­யி­கள் டெல்­லி­யின் புற­ந­கர்ப் பகு­தி­யில் தொடர் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர்.

இத­னால் டெல்­லி­யிலும் அதன் எல்­லை­யோ­ரப் பகு­தி­களி­லும் போக்கு­வ­ரத்து தொடர்ந்து பாதிக்­கப்­பட்டு வரு­கிறது.

புதிய வேளாண் சட்­டங்­களை ஆராய்­வ­தற்­காக நான்கு பேர் கொண்ட குழுவை உச்­ச­ நீ­தி­மன்றம் கடந்த ஜன­வ­ரி­யில் அமைத்­தது.

இந்­நி­லை­யில், விவ­சா­யி­க­ளின் போராட்­டம் தொடர்­பான வழக்­கு­கள் உச்ச நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­தி­னம் மீண்­டும் விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, போராட்­டம் நடத்­து­வது விவ­சா­யி­க­ளின் உரிமை என்­றா­லும் அதற்­காக மக்­கள் பயன்­படுத்­தக் கூடிய நெடுஞ்­சா­லை­களை அவர்­கள் எப்­படி நீண்ட கால­மாக அடைத்து வைக்க முடி­யும்? என நீதி­ப­தி­கள் கேள்வி எழுப்­பி­னர்.

மேலும், விவ­சா­யி­க­ளின் பிரச்சி­னையைத் தீர்க்க, மத்­திய அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது என்­றும் நீதி­ப­தி­கள் கேட்­ட­னர்.

அதற்­குப் பதி­ல­ளித்த அர­சுத்­தரப்பு வழக்­க­றி­ஞர், மத்­திய அரசு உயர்­நிலை குழு அமைத்த போதி­லும் அந்­தக் குழு கூட்­டிய கூட்­டத்­தில் பங்­கேற்க விவ­சா­யி­கள் மறுத்து விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

இதை­ய­டுத்து விவ­சா­யி­கள் தங்­க­ளுக்­குள்ள மனக்­கு­றை­களை நாடா­ளு­மன்ற விவா­தங்­கள் அல்­லது நீதி­மன்­றங்­கள் வாயி­லாக தீர்த்­துக் கொள்ள முடி­யும் என்று குறிப்­பிட்ட நீதி­ப­தி­கள், வழக்கு விசா­ர­ணையை ஒத்தி வைத்­த­னர்.