அழுதவாறே இருந்த ஷாருக்கான் மகன்; நான்காண்டுகளாக போதைப் புழக்கம்

மும்பை: போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன், விசாரணையின்போது அழுதபடியே இருந்ததாகச் சொல்லப்படுகிறது.


உல்லாசக் கப்பலில் நடந்த விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பில் ஆர்யன் உட்பட எட்டுப் பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில், ஆர்யனிடம் விசாரணை நடத்தியபோது அவர் நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்ததாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.


அத்துடன், கிட்டத்தட்ட நான்காண்டுகளாக அவர் போதைப்பொருள் புழங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும், பிரிட்டன், துபாய் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தபோதும் அவர் போதைப்பொருள் புழங்கியதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் கூறின.


இந்த விவகாரத்தில் முக்கியமானவர்கள் பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இதனிடையே, தம்மைப் பிணையில் விடுவிக்கக் கோரி ஆர்யன் இன்று மனுத்தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, இந்தித் திரையுலக நட்சத்திரமான சல்மான்கான் நேற்று இரவு ஷாருக்கானை அவரது வீட்டிற்குச் சென்று நேரில் சந்தித்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!