புதுடெல்லி: இந்தியா முழுவதும் 4,445 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு பெரும் துணி, ஆடை தொழிற்பேட்டைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பெரும் துணி, ஆடை தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான பி.எம்.மித்ரா திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், அசாம், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அதில் நாட்டம் தெரிவித்தன.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், இதனால் 7 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 14 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றார்.