தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் உலகின் முதல் மலேரியா தடுப்பூசி

1 mins read
7a6e8703-897d-4f41-8923-7e65a3870e77
-

ஹைத­ரா­பாத்: இந்­தி­யா­வைச் சேர்ந்த பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் மலே­ரியா பாதிப்பை தடுப்­ப­தற்­கான தடுப்­பூ­சி­யின் ஒரு பகுதியை உற்­பத்தி செய்ய உள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

ஜிஎஸ்கே என்ற மிகப்­பெ­ரிய மருந்து நிறு­வ­னம் உரு­வாக்கி உள்ள இந்த தடுப்­பூ­சிக்கு உலக சுகா­தார அமைப்பு அண்­மை­யில் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

மலே­ரி­யா­வுக்கு எதி­ரான உல­கின் முதல் தடுப்­பூசி இது­வா­கும். இதன் உற்­பத்­தியை தொடங்­க­வும் பொதுப்­ப­யன்­பாட்­டுக்கு என சந்தைப்­ப­டுத்­த­வும் சுமார் இரண்டு மாத­மா­கும் என கூறப்­ப­டு­கிறது.

மலே­ரி­யா­வுக்கு எதி­ரான தடுப்­பூசி தொடர்­பாக ஜிஎஸ்கே நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் செய்து கொண்­டுள்­ள­தாக பயோ­டெக் நிறு­வ­னம் கடந்த ஜன­வரி மாதம் அறி­வித்­தது.

அதன்­படி, ஜிஎஸ்கே நிறு­வ­ன­மானது, மலே­ரியா தடுப்­பூ­சிக்­கான தொழில்­நுட்­பம், அனைத்து உரி­மங்­க­ளை­யும் பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­து­டன் பகிர்ந்துகொள்­ளும். ஆப்­பி­ரிக்கா உள்­ளிட்ட உல­கின் குறிப்­பிட்ட பகு­தி­களில் மலே­ரியா தடுப்­பூ­சி­யைப் பர­வலா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என உலக சுகா­தார அமைப்பு பரிந்­து­ரைத்­துள்­ளது.

முதற்­கட்டமாக கானா, கென்யா உள்­ளிட்ட பகு­தி­களில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு என சுமார் பத்து மில்­லி­யன் மலே­ரியா தடுப்­பூசி­கள் வழங்க ஜிஎஸ்கே நிறு­வ­னம் முன்­வந்­துள்­ளது.

உல­கம் முழு­வ­தும் பர­வ­லா­கப் பயன்­ப­டுத்த உலக சுகா­தார நிறு­வ­னம் பரிந்­து­ரைக்­கும் பட்­சத்­தில், ஆண்­டு­தோ­றும் சுமார் 15 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை, எதிர்­வ­ரும் 2018ஆம் ஆண்டு வரை நன்­கொடை­யாக அளிக்­க­வும் தயார் என அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இதன் மூலம் லட்­சக்­க­ணக்­கான குழந்­தை­கள் பலன் அடை­வார்­கள் என சுகா­தார நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.