மோடி: பிரதமர் ஆவேன் என நினைக்கவே இல்லை

1 mins read
613730c6-64b3-474a-be84-3e92e0309f6b
-

லக்னோ: குஜ­ராத் முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்­ற­போது, நாட்­டின் பிர­த­ம­ரா­வது குறித்து தாம் நினைத்­துக்­கூடப் பார்க்­க­வில்லை எனப் பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.

மோடி பொதுச்­சே­வை­யில் ஈடுபடத் தொடங்கி இரு­பது ஆண்­டு­கள் நிறைவு பெற்­றுள்­ளதை அடுத்து ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு அக்­டோ­பர் 7ஆம் தேதி, குஜ­ராத் முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்­றார் மோடி. அதன் பிறகு தொடர்ந்து 13 ஆண்­டு­கள் முதல்­வர் பத­வி­யில் நீடித்த அவர், 2014ஆம் ஆண்டு பிர­த­ம­ரா­கப் பதவி­ ஏற்­றார்.

"குஜ­ராத்தி மக்­களில் ஒரு­வனாக வாழ்ந்து வந்த வேளை­யில், 2001ஆம் ஆண்டு முதல்­வர் என்ற புதிய பொறுப்பு கிடைத்­தது. பிறகு நாட்­டின் பிர­த­மர் ஆவேன் என்று நினைத்­துக் கூட பார்க்­க­வில்லை," என்று பிர­த­மர் மோடி கூறியுள்ளார்.