புதுடெல்லி: இந்தியா, பிரிட்டன் இடையேயான விமானப் பயணம் குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருடன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருவரும் தொலைபேசி வழி ஆலோசனை நடத்தியதாக ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சருடனான உரையாடல் நல்ல விதமாக அமைந்தது. இருநாடுகளுக்கு இடையிலான மக்களின் பயணத்தை எளிதாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்கும் கொரோனா சான்றிதழை ஏற்பது தொடர்பாக அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இது குறித்தும் இம்முறை இருதரப்பிலும் பேசப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.