மூன்று நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் விமான நிலையம்

1 mins read
95823753-bc6c-47ad-836b-2647a8eeff23
தேங்கி உள்ள மழை நீரில் மிதக்கும் பெங்களூரு விமான நிலையம். : ஊடகம் -

பெங்­க­ளூரு: கடந்த மூன்று தினங்­க­ளாக பெங்­க­ளூ­ரில் கன­மழை நீடித்து வரும் நிலை­யில், அங்­குள்ள அனைத்­து­லக விமான நிலைய பகு­தி­யில் மழை நீர் வெள்­ளம்­போல் தேங்கி உள்­ளது.

இத­னால் விமான நிலை­யத்­துக்­குள் செல்ல முடி­யா­மல் பய­ணி­கள் தவிப்­புக்கு ஆளா­கி­னர். குறித்த நேரத்­துக்­குள் செல்ல முடி­யா­மல் பலர் விமா­னத்தைத் தவ­ற­விட்­ட­னர்.

பல பய­ணி­கள் வி­மான நிலை­யத்­துக்கு வெளியே நின்­றி­ருந்த டிராக்­டர் வாக­னங்­களில் தங்­கள் உடை­மை­க­ளு­டன் ஏறி உள்ளே சென்­ற­னர்.

அதே­போல், விமான நிலை­யத்­தில் இருந்த கார்­களும் வெளியே செல்ல முடி­ய­வில்லை. பல வாக­னங்­களில் தண்­ணீர் புகுந்­த­தால் அவை சிறிது தூரம் சென்­ற­தும் நின்­று­போ­யின.

பெங்­க­ளூரில் இருந்து விமா­னங்­கள் கிளம்­பு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டது. சில விமா­னங்­கள் தரை­யிறங்­க­வும் அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதற்­கி­டையே, டெல்­லி­யில் கழி­வு­நீர் அமைப்பு பல ஆண்­டு­க­ளாக சீரமைக்­கப்­ப­டா­த­தால் நடப்பு பரு­வ­மழைக் காலத்­தில் அங்­குள்ள முக்­கி­யப் பகு­தி­களில் மழை நீர் வடி­யா­மல் தேங்கி உள்­ளது. இத­னால் போக்­கு­வ­ரத்­தும் மக்­கள் நட­மாட்­ட­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.