பெங்களூரு: மூன்று வயதுச் சிறுமி ஆர்வியின் நினைவாற்றலை சோதிக்க இந்தியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் மெய்நிகர் வழியாகத் தேர்வு நடத்தியது.
அதில், சிறுமி ஆர்வி (படம்) கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்திய நகரங்களின் பெயர்கள், கன்னடம் மற்றும் ஆங்கில மாதங்கள், நாட்கள், நிறங்கள், பறவைகள், விலங்குகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தெளிவாகச் சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு விலங்குகளின் குரல்களை 'மிமிக்ரி' செய்தும் வியக்க வைத்துள்ளார்.
மூன்று வயதே ஆன நிலையில் சிறுமி ஆர்விக்கு ஆற்றல்மிகு நினைவாற்றல் உள்ளதால் அவரது சாதனை 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு' சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தச் சிறுமியை ஊர்க்காரர்கள் கொண்டாடுகின்றனர்.

