கர்நாடகாவில் மூன்று வயது சாதனைச் சிறுமி

கர்நாடகாவில் மூன்று வயது சாதனைச் சிறுமி

1 mins read
3a377411-fe15-4c7b-bb40-2a8a8357ac74
-

பெங்­க­ளூரு: மூன்று வய­துச் சிறுமி ஆர்­வி­யின் நினை­வாற்­றலை சோதிக்க இந்­தியா புக் ஆப் ரெக்­கார்டு நிறு­வ­னம் மெய்­நி­கர் வழி­யா­கத் தேர்வு நடத்­தி­யது.

அதில், சிறுமி ஆர்வி (படம்) கன்­ன­டம் மற்­றும் இந்தி ஆகிய மொழி­களில் இந்­திய நக­ரங்­க­ளின் பெயர்­கள், கன்­ன­டம் மற்­றும் ஆங்­கில மாதங்­கள், நாட்­கள், நிறங்­கள், பற­வை­கள், விலங்­கு­கள், காய்­க­றி­கள், பழங்­கள் ஆகி­ய­வற்­றின் பெயர்­க­ளைத் தெளி­வா­கச் சொல்லி ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளார்.

அது­மட்­டு­மல்­லா­மல், பல்­வேறு விலங்­கு­க­ளின் குரல்­களை 'மிமிக்ரி' செய்­தும் வியக்க வைத்துள்ளார்.

மூன்று வயதே ஆன நிலை­யில் சிறுமி ஆர்­விக்கு ஆற்­றல்­மிகு நினை­வாற்­றல் உள்­ள­தால் அவ­ரது சாதனை 'இந்­தியா புக் ஆஃப் ரெக்­கார்டு' சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளது. அந்தச் சிறு­மியை ஊர்க்­கா­ரர்­கள் கொண்­டா­டு­கின்­ற­னர்.