வெற்றிக் களிப்பில் விஜய் மக்கள் இயக்கம்; அரசியல் கட்சி அடுத்த இலக்கு?

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு பல இடங்களில் வெற்றி பெற்றுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சுயேட்சைகளாக களமிறங்கினாலும் விஜய்யின் பெயர், கட்சிக்கொடி போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதால் இந்த வெற்றியை விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த வெற்றி நடிகர் விஜய்க்கு அரசியலில் ஈடுபடும் தைரியத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 121 இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். 108 இடங்களில் மக்கள் வாக்குகள் மூலமும், 13 இடங்களில் போட்டியின்றியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் கூறியுள்ளனர். அவர் விஜய்யிடம் பேசியிருக்கிறார். முதலில் விஜய் மறுத்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் இயக்கத்தினருக்கு மக்களிடம் உள்ள நற்பெயரை எடுத்துக்கூற, பின்னர் சம்மத்தத்தோடு, தமது பெயரைப் பயன்படுத்தவும் அனுமதித்துள்ளார்.
அதிமுக, பாமக உட்பட பல அனுபவமிக்க அரசியல் கட்சிகளின் கடுமையான போட்டி. இயக்கம் செய்த நற்பணிகள், தேர்தல் வாக்குறுதிகள், அனல் பறக்கும் பிரசாரங்கள் என அரசியல் கட்சிகளுக்கு நிகராக தேர்தல் களமிறங்கினர் இயக்கத்தினர்.

“அடுத்து என்ன என்பது குறித்து தளபதி பேசுவது தான் சரியாக இருக்கும். இயக்கத்தினர் மக்கள் நலப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்,” என்று புஸ்ஸி ஆனந்த் தமிழக ஊடகத்தினரிடம் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!