'உலகின் ராணுவ சக்தியாக உருவாக்குவதே இலக்கு'

'உலகின் ராணுவ சக்தியாக உருவாக்குவதே இலக்கு'

2 mins read
ef81fc9b-5dcb-43bb-8db9-80aa74d6e730
-

ஏழு பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

புது­டெல்லி: இந்­தி­யா­வின் ராணு­வத் தள­வாட தயா­ரிப்­பில் சுய­சார்பை மேம்­ப­டுத்­தும் வகை­யில் 41 ஆயுத தொழிற்­சா­லை­கள், அர­சின் கட்­டுப்­பாட்­டில் செயல்­படும் பாது­காப்பு நிறு­வ­னங்­க­ளாக மாற்­றப்­பட்டு உள்­ளன.

அந்த ஏழு பாது­காப்பு நிறு­வ­னங்­களை பிர­த­மர் மோடி நேற்று காணொளி வழி­யாக தொடங்கி வைத்து உரை­யாற்­றி­னார்.

"சுதந்­தி­ரத்­திற்­குப் பிறகு முதல் முறை­யாக இந்­தி­யா­வின் பாது­காப்புத் துறை­யில் பல பெரிய சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­படு கின்றன. மேலும் இது முன்பு இருந்­த­தை­விட அதிக வெளிப்­ படைத்­தன்­மையையும் நம்­பிக்­கை­யை­யும் கொண்­டிருக்கும்," என்று திரு மோடி கூறி­னார்.

"சுதந்­தி­ரத்­திற்குப் பின்­னர் ராணுவத் தள­வாட தொழிற்­சா­லை­களை நவீ­னப்­ப­டுத்த வேண்­டும் என்ற தேவை இருந்தாலும் அதில் கவ­னம் செலுத்­தப்­ப­ட­வில்லை," என்­றார்.

"'சுய­சார்பு இந்­தியா' கொள்­கை­யின் கீழ் இந்­தி­யாவை தனது சொந்தப் பலத்­தில் உல­கின் மிகப்­பெ­ரிய ராணுவ சக்­தி­யாக மாற்­று­ வ­தை­யும் நவீன ராணுவ தொழிற்­சா­லை­களை உரு­வாக்கி மேம்படுத் துவதும் நாட்­டின் குறிக்­கோ­ளாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

"கடந்த ஏழு ஆண்­டு­களில் இந்தத் தீர்­மா­னத்­தை­யும் 'மேக் இன் இந்­தியா' என்ற தாரக மந்­தி­ரத்­தை­யும் நோக்கி தேசம் சென்­றுள்­ளது.

"புதிய எதிர்­கா­லத்­திற்­காக இந்­தியா உறு­தி­பூண்­டுள்­ளது. இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்து 75 ஆண்­டு­கள் நிறை­வ­டை­யும்­போது நீண்­ட­கா­ல­மாக கிடப்­பில் இருந்த திட்­டங்­கள் நிறைவேற்றப்பட்டுவிடும்," என்று மேலும் அவர் சொன்னார்.

ஏழு பாதுகாப்பு நிறு­வ­னங்­களும் தங்­கள் பணி காலத்­தில் 'ஆராய்ச்சி மற்­றும் புது­மைக்கு' முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என்று கேட்டுக் கொண்ட பிர­த­மர் மோடி, எதிர்­கால தொழில்­நுட்­பத்­தில் நீங்­கள் முன்­னிலை வகிக்க வேண்­டும், ஆய்­வா­ளர்­க­ளுக்கு வாய்ப்­பு­களை வழங்க வேண்­டும் என்று வலி­ யுறுத்­தி­னார்.