திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் கடைசி நிகழ்வான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி எளிமையாக நடைபெற்றது.
கொரோனா பரவல் காரண மாக கடந்த ஆண்டைப்போல இம்முறையும் கோவிலுக்கு உள்ளே தொட்டியில் தண்ணீர் நிரப்பி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் தங்கக் கொடி மரத்தில் இருந்து கருட கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

