பயங்கரவாதிகளுடன் மோதல்; ராணுவ அதிகாரி, வீரர் ஒருவர் உயிரிழப்பு

பயங்கரவாதிகளுடன் மோதல்; ராணுவ அதிகாரி, வீரர் ஒருவர் உயிரிழப்பு

1 mins read
b4106edb-ea1f-4a66-abc5-1163da1f14d3
ஸ்ரீநகரில் பொதுமக்களில் ஒருவரை தடுத்து நிறுத்தி பாதுகாப்புப் படை வீரர்கள் விசாரிக்கின்றனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவரும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்ததால் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ரில் உள்ள பூஞ்ச்-ராஜோரி வனப் பகு­தி­யில் பயங்­க­ர­வா­தி­கள் பதுங்கி இருப்­ப­தாக தகவல் கிடைத்­ததையடுத்து ராணு­வத்­தி­னர் அங்கு சென்று தீவிர தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது அங்கு பதுங்­கி­யி­ருந்த பயங்­க­ர­வா­தி­கள் ராணு­வத்­தி­னரை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­ட­னர்.

ராணு­வத்­தி­ன­ரும் பதில் தாக்­கு­தல் நடத்­தி­னர். இரு தரப்­பி­ன­ருக்­கும் இடையே நடை­பெற்ற இந்த துப்­பாக்­கிச் சண்­டை­யில் ராணுவ அதி­காரி, வீரர் என ராணு­வத் தரப்­பில் இரு­வர் வீர­ம­ர­ணம் அடைந்­த­னர்.

இதே பகு­தி­யில் கடந்த நான்கு நாட்­க­ளுக்கு முன்பு பயங்­க­ர­வா­தி­ க­ளின் தாக்­கு­த­லில் ஐந்து ராணுவ வீரர்­கள் கொல்­லப்­பட்­ட­னர்.

அப்­ப­கு­தி­யில் தொடர்ந்து துப்­பாக்­கிச்­சண்டை நடை­பெற்று வரு­வ­தால் ஜம்மு பூஞ்ச்-ராஜோரி நெடுஞ்­சாலை மூடப்­பட்­டுள்­ளது.

கடந்த 10ஆம் தேதி பாது­காப்புப் படை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­திய அதே பயங்­க­ர­வா­தி­கள் தற்­போ­தும் தாக்­கு­தல் நடத்­தி­யி­ருப்­ப­தாக ராணுவ வட்­டாரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.