புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 16,862 பேர் பாதிக்கப்பட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 19,391 பேர் குணம் அடைந்தனர். தொற்றுப் பாதிப்புக்கு ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 37 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 678ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 100ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 814ஆக அதி கரித்துள்ளது.

