கொழும்பு: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தியா-இலங்கை பொருளியல் கூட்டுத் திட்ட ஏற்பாட்டின்கீழ், 500 மில்லியன் டாலர் நிதி உதவியைப் பெறுவதற்காக தாங்கள் இந்திய தூதரகத்தின் மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கழகத்தின் தலைவர் தெரிவித்து உள்ளார்.

