அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியிலும் சீனப் படைகள் குவிப்பு

புதுடெல்லி: கிழக்கு லடாக்கை தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீன நாட்டுப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து இந்திய ராணுவத்தின் கிழக்கு வட்டாரத் தளபதி மனோஜ் பாண்டே கவலை தெரிவித் துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் 2020 மே மாதம், சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அதைத் தடுத்த இந்திய வீரர்களுடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

கிழக்கு லடாக் பகுதியைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதியிலும் சீனப்படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இது கவலை அளிக்கிறது. நமது ராணுவத்திடம் சிறந்த கண்காணிப்பு ரேடார்கள், சிறந்த தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன.

மேலும் பாதுகாப்புத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிக அவசியம். எனவே தற்காப்பு அமைச்சு அதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

தற்போது எல்ஏசி பகுதியில் இரவுநேரங்களிலும் கண்காணிப்புப் பணிகளை தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக ஆளில்லாக் கண்காணிப்பு விமானம் பயன்படுத்தப்படும். இவ்வாறு தளபதி மனோஜ் பாண்டே கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!