ஷாருக்கான் மகனுக்கு பிணை மறுப்பு

ஷாருக்கான் மகனுக்கு பிணை மறுப்பு

1 mins read
76d52bf2-bb85-4174-ab1b-790ba22ea6d7
-

போதைப் போருள் வழக்­கில் கைதான ஆர்­யன் கான் அக்­டோ­பர் 8 ஆம் தேதி முதல் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்த வழக்­கில் நடி­கர் ஷாருக்­கான் மகன் ஆர்­யன் கான் உள்­பட 20 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். கைது செய்­யப்­பட்­டுள்ள ஆர்­யன்­கான் மும்­பை­யில் உள்ள ஆர்­தர் ரோடு சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

ஆர்­யன் கான் சார்­பில் பிணைக்கு விண்­ணப்­பிக்­கப்­பட்­டது. மனுவை விசா­ரித்த நீதி­மன்­றம் அவ­ருக்­குப் பிணை வழங்க மறுப்­புத் தெரி­வித்­தது. மேலும், அவரை 14 நாட்­கள் சிறை­யில் அடைக்­க­வும் உத்­த­ர­விட்­டது. இத­னைத் தொடர்ந்து அவர் தற்­போது சிறை­யில் உள்­ளார்.

இந்த வழக்­கில் தனக்கு பிணை வழங்­கக்­கோரி ஆர்­யன் கான் உள்­ளிட்­டோர் இரண்­டா­வது முறை­யாக மனுத் தாக்­கல் செய்­த­னர். மனுவை விசா­ரித்த சிறப்பு நீதி­மன்­றம் ஆர்­யன்­கான், அர்­பாஸ் மெர்­சண்ட் மற்­றும் முன்­முன் தமேச்சா ஆகி­யோ­ருக்கு பிணை வழங்க மறுப்பு தெரி­வித்து விட்­டது.