இந்தியாவில் கொவிட்-19 க்கு எதிராகப் போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியதைக் கொண்டாட்டும் மணல் சிற்பத்தை கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார்.
கடலைப் பின்னணியாகக் கொண்ட வண்ண ஓவியம், இந்தியாவின் வரைபடத்தையும் கொவிட் தடுப்பூசியையும் காட்டுகிறது. “வாழ்த்துக்கள்”, “இந்தியாவின் 100 கோடி தடுப்பூசியை நோக்கும் பயணம்” என அந்த மணற்சிற்பத்தில் எழுதப்பட்டது.
#ஆகப்பெரிய தடுப்பூசி இயக்கம் என்ற வாசகமும் மணல் சிற்பத்தில் சேர்க்கப்பட்டது. இவ்வாண்டுக்குள் 944 மில்லியன் பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடும் இலக்கை இந்திய அரசாங்கம் கொண்டுள்ளது.