கிராமங்களுக்கும் இணையச் சேவை: நடமாடும் கைபேசி கோபுரங்கள் அமைப்பு

கிராமங்களுக்கும் இணையச் சேவை: நடமாடும் கைபேசி கோபுரங்கள் அமைப்பு

1 mins read
74e641d6-1c04-44d8-a0b5-424f816806dd
-

பெங்களூரு: கிரா­மங்­க­ளி­லும் அதி­வேக இணைய இணைப்பு கிடைக்க வேண்­டும் என மத்­திய அரசு கூறி வரும் நிலை­யில், பெங்­க­ளூரு தனி­யார் நிறு­வ­னம் ஒன்று, இணை­யப் பயன்­பாட்டை அதி­க­ரிக்­கும் வகை­யில் நட­மா­டும் கைபேசி கோபு­ரங்­களை நிறு­வத் திட்­ட­மிட்­டுள்­ளது.

இதற்­காக ஆளில்லா சிறிய ரக வானூர்­தி­கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன. அவை சூரிய மின்­னாற்­றல், பேட்­டரி மின்­சா­ரத்­தின் உத­வி­யோடு இயக்­கப்­படும்.

அவற்­றில் உள்ள ஹைபி­ரிட் இன்­ஜி­னு­டைய செயல்­பாடு கைபேசி கோபு­ரங்­க­ளுக்கு இணை­யா­ன­தாக இருக்­கும்.

மலைப்­ப­குதி, தொலைத்­தொடர்பு வசதி இல்லாத பகு­தி­களில் இந்த நவீன வானூர்தி­க­ளைப் பயன்­ப­டுத்தி இணையச் சேவையை அளிக்க இய­லும் என்­கிறது அத்­த­னி­யார் நிறு­வ­னம்.

"சிறிய ரக வானூர்­தி­கள் மூலம் கைபேசி கோபு­ரங்­கள் போன்ற அமைப்பை ஏற்­ப­டுத்­து­வது எளிய பணி­தான். மேலும் பேரி­டர் காலங்­களில் ஒருங்­கி­ணைப்பை ஏற்­ப­டுத்த இந்த ஏற்­பாடு பயன்­படும்.

"மேலும், வான்­வெளி விளம்­ப­ரம், பொருள்­களை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்­றுக்­கும் இந்த நவீன தொழில்­நுட்­பம் உத­வும்," என்­கி­றார் அந்­நி­று­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­காரி விஷால் சவு­ரவ்.