கேரளாவில் 29,000 பேர் 435 முகாம்களில் தஞ்சம்

கேரளாவில் 29,000 பேர் 435 முகாம்களில் தஞ்சம்

1 mins read
93e12f0a-8318-42fd-8e60-63f7a40cc285
-

திரு­வ­னந்­தபுரம்: மழை, நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 435 நிவா­ரண முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக கேரள அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்த முகாம்­களில் சுமார் 29 ஆயி­ரம் பேர் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த 12ஆம் தேதி கேர­ளா­வில் பெய்­யத் தொடங்­கிய மழை இன்­னும் நீடித்து வரு­கிறது. பல இடங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்ள நிலை­யில், நிலச்­ச­ரி­வும் ஏற்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கிழக்கு மத்­திய அர­பிக்­க­ட­லில் நீர் சுழற்சி ஏற்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக கேர­ளா­வில் வரும் 25ஆம் தேதி வரை இடி, மின்­ன­லு­டன் கூடிய கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

கொல்­லம், பத்­த­னம்­திட்டா, கோட்­ட­யம், எர்­ணா­கு­ளம், இடுக்கி, திருச்­சூர் உள்­பட பத்து மாவட்­டங்­க­ளுக்கு மஞ்­சள் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மீட்பு நிவா­ர­ணப் பணிக்­கான நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப் பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மழை, நிலச்­ச­ரிவு தொடர்­பான சம்­ப­வங்­களில் பலி­யா­னோர் எண்­ணக்கை 50ஆக அதி­க­ரித்­துள்­ளது. மேலும், நான்கு பேரைக் காண­வில்லை. அவர்­க­ளைத் தேடும் பணி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கிறது.