ஆறு மகள்களையும் மருத்துவராக்கிய கேரளத் தம்பதி

ஆறு மகள்களையும் மருத்துவராக்கிய கேரளத் தம்பதி

2 mins read
9f52cad0-8893-41dc-b641-c54a2462b51c
நான் எனது ஆறு பெண் குழந்தைகளையும் வளர்ப்பது பற்றி ஒருநாளும் கவலைப் பட்டதில்லை. நான் அவர்களை சுமையாக நினைத்ததும் இல்லை. நான், என் குழந்தைகள் என்பதில் உறுதியாக இருந்தேன் என்கிறார் தாய் சாய்னா.படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: பள்­ளிப்­ப­டிப்பை பாதி­யி­லேயே நிறுத்­திய பெண் ஒரு­வர், தனக்­குப் பிறந்த ஆறு பெண் குழந்­தை­க­ளை­யும் மருத்­துவராக்கி, இச்­செய்தியைக் கேட்பவர்களை எல்­லாம் வியப்­பில் ஆழ்த்தி வரு­கி­றார்.

கேரள மாநி­லம், கோழிக்­கோடு மாவட்­டம், நட­பு­ரத்­தில் பிறந்து வளர்ந்­த­வர் சாய்னா. ஐந்­தாம் வகுப்­பில் படித்து வந்தவர், தனது உற­வி­னர் அக­மது குஞ்­சம்மை திரு­ம­ணம் செய்து கொள்­வ­தற்­காக படிப்பை பாதி­யில் நிறுத்­தி­னார். அப்­போது அவ­ரது வயது 12.

சென்­னை­யில் வியா­பா­ரம் செய்து வந்­த அக­மது, திரு­ம­ணம் முடிந்ததும் கத்­தார் நாட்டுக்குப் பணிபுரியச் சென்றார். அதன்பிறகு மனை­வி சாய்னாவுடன் அங்கு குடி­யே­றி­னார்.

சாய்­னா­வுக்குத் தொடர்ச்­சி­யாக ஆறு மகள்­கள் பிறந்­த­னர். மற்­ற­வர்­க­ளுக்கு ஒரு முன்­னு­தா­ர­ண­மாக இருக்க விரும்­பிய தம்­ப­தி­யர், தங்­க­ளது மகள்­களுக்கு நல்ல கல்­வியை வழங்க முடிவு செய்­த­னர்.

தம்பதிகளின் ஆறு மகள்­களில் முதல் நான்கு மகள்­களும் மருத்­து­வம் பயின்று மருத்­து­வத் துறை­யில் பணி­யாற்றி வரு­கின்றனர்.

ஐந்­தா­வது மகள் சென்­னை­யில் எம்­பி­பி­எஸ் இறு­தி­யாண்­டும் கடைக்­குட்டி மகள் மங்­க­ளூ­ரு­வில் எம்­பி­பி­எஸ் முத­லா­மாண்­டும் படித்து வரு­கி­ன்றனர்.

அத்துடன், முதல் நான்கு மகள்­க­ளின் கண­வர்­களும் மருத்­து­வர்­களாகவே அமைந்துள்ளனர்.

மகள்­க­ளின் கணவர்களும் ஒரே துறை­யில் இருந்­தால் ஒரு­வரை ஒரு­வர் புரிந்துகொள்ள முடி­யும், விட்­டுக்கொடுத்­துப் போவார்­கள் என்­ப­தால் மருத்­து­வம் படித்த மண­ம­கன்­களை தேர்வு செய்­த­தா­க­வும் கூறு­கி­றார்.

35 ஆண்­டு­களுக்குப் பிறகு கத்­தா­ரில் இருந்து தம்­ப­தி­கள் தங்­க­ளது மகள்­க­ளு­டன் கேர­ளம் திரும் பிய நிலையில், இரு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அக­மது மார­டைப்­பால் மர­ண­ம­டைந்­தார். கணவரின் ஆசையை நிறை­வேற்­றும் வகை­யில் கடைசி இரு மகள்­களையும் மருத்­து­வம் பயில ஊக்குவித்து வரு­கி­றார் சாய்னா.