பெட்ரோல் விலை உயர்வுக்கு தவறான கொள்கையே காரணம்: ப. சிதம்பரம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பெட்­ரோல், டீசல் விலை வர­லாறு காணாத அள­வுக்கு ஏறி­விட்­டது. நாடு முழு­வ­தும் பெட்­ரோல் விலை 100 ரூபா­யைத் தாண்­டி­விட்­டது. அதே­போல் முதல் முறை­யாக டீசல் விலை­யும் வர­லாறு காணாத அள­வுக்கு 100 ரூபாயைத் தாண்­டி­விட்­டது.

இத­னால் வாக­ன­மோட்­டி­கள் மிகுந்த கவ­லை­ய­டைந்­துள்­ள­னர். சம்­பா­திக்­கும் காசு, பெட்­ரோ­லுக்­குக் கொடுக்­கவே சரி­யாக இருக்­கிறது என்று பலர் புலம்­பு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் நாட்­டில் உயர்ந்­தி­ருக்­கும் பெட்­ரோல், டீசல் விலைக்கு மத்­திய அர­சின் தவ­றான வரிக்­கொள்­கையே கார­ணம் என்று முன்­னாள் மத்­திய நிதி­ய­மைச்­ச­ரும் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான ப.சிதம்­ப­ரம் கடு­மை­யாகச் சாடி­யுள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய ப.சிதம்­ப­ரம், "ஒரு லிட்­டர் பெட்­ரோல், டீசல் ரூ.100ஐ தாண்டி விற்­ப­னை­யா­கிறது. நடுத்­தர மக்­கள்கூட செலவு செய்ய முடி­யாது. ஒரு பேரல் கச்சா எண்­ணெய் விலை 145 டால­ராகக்கூட இருந்­துள்­ளது. அர­சின் தவ­றான வரிக்­கொள்­கையே இதற்கு கார­ணம்.

"வரி விதிப்பு என்­பது ஒரு எல்­லைக்­குள் மட்­டுமே இருக்க வேண்­டுமே தவிர, ஒரே பொரு­ளின் மீது 33% வரியை விதிப்­பது தவ­றா­னது. கொரோனா உள்­ளிட்ட பல கார­ணங்­க­ளால் உலக வர்த்­த­கம் முடங்­கி­யுள்­ளது. மக்­க­ளி­டம் கடன் சுமை அதி­க­ரித்­துள்­ளது. தனி­ம­னித சேமிப்பு குறைந்­துள்­ளது. இது அனைத்­தும் நாட்­டுக்கே விடுக்­கப்­பட்­டி­ருக்­கும் எச்­ச­ரிக்கை மணி­யா­கும்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!