மோடி: உள்ளூரில் தயாரித்த பொருட்களை வாங்குங்கள்

2 mins read
39eb0b72-7425-47d3-9282-f822197dfdc0
-

புது­டெல்லி: தீபா­வளி ‌‌பண்­டி­கை­யின்­போது மக்­கள் உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­க­ளை வாங்க வேண்­டும் என்று பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

அடுத்­த­டுத்த வாரங்­களில் தீபா­வளி உள்­ளிட்ட பண்­டி­கை­கள் வர உள்ள நிலை­யில் மக்­கள் உள்­நாட்டுப் பொருட்­க­ளையே வாங்க வேண்­டும் என்று 'மன­தின் குரல்' என்ற பெயரி ­லான மாதாந்­திர வானொலி உரை­யில் பிர­த­மர் மோடி கேட்­டுக்­கொண்­டார்.

உள்­நாட்­டுப் பொருட்­களை வாங்­கி­னால் பிர­கா­சிப்­பது பண்­டி­கை­கள் மட்­டு­மல்ல, ஓர் ஏழை, ஒரு கைவி­னைக் கலை­ஞர், ஒரு நெச­வா­ளி­யின் வீடும்­தான் என்று பிர­த­மர் குறிப்­பிட்­ட­தாக 'புதிய தலை­முறை' தெரி­வித்­தது.

இந்­தியப் பெண்­கள் அனைத்து துறை­க­ளி­லும் தங்­க­ளு­டைய திற­மையை வெளிப்­ப­டுத்தி வரு­வ­தா­க­வும் திரு மோடி தெரி­வித்­தார்.

துணை ராணு­வம் உட்­பட காவல் படை­களில் சேர்ந்­துள்ள பெண்­ களின் எண்­ணிக்கை கடந்த ஏழு ஆண்­டு­களில் இரண்டு மடங்காக அதி­க­ரித்­துள்­ளதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

கொரோனா தடுப்­பூசி திட்­டத்­தில் கிடத்த வெற்றி, சவால்­களை எதிர்­கொள்­ளும் இந்­தி­யா­வின் திறனை வெளிக்­காட்­டி­யுள்­ள­தா­க­வும் பிர­த­மர் கூறினார்.

வானூர்தி(டிரோன்) தொழில் ­நுட்­பம் தற்­போது கொரோனா தடுப்­பூசி விநி­யோ­கத்­தி­லும் பயன் ­படுத்தப்ப­டு­கிறது. குஜ­ராத்­தில் வயல்­களில் உரம் தெளிக்­கும் பணி­யில் வானூர்­தி­கள் ஈடு­ப­டுத்­தப் ­படு­கின்­றன.

அனைத்து தேவை­க­ளுக்­கும் ஏற்ப 'டிரோன்­கள்' கள­மி­றக்­கப்­படும். போக்­குவ­ரத்­திற்­கும் வீடு­களில் பொருட்­கள் விநி­யோ­கத்­திற்­கும் அவ­சர காலங்­களில் உதவி செய்­ய­வும் சட்­டம் ஒழுங்கை பரா­ம­ரிக்­க­வும் டிரோன்­கள் பயன்­பாட்டை அதி­க­ரிக்க நாடு முயற்சி செய்து வரு­கிறது.

"மத்­திய அர­சின் புதிய 'டிரோன்' கொள்­கையை நாட்­டின் இளை­ஞர்­கள் உரிய முறை­யில் பயன்­ப­டுத்த வேண்­டும்" என்று பிர­த­மர் மோடி மேலும் தெரிவித்தார்.

மத்திய கலாசார அமைச்சின் சார்பில் நாடு தழுவிய கோலப் போட்டி நடத்தப்படும் என்றும் தமது உரையில் அவர் அறிவித்தார்.