உலக சாதனை புத்தகத்தில் இந்திய சிறுவன்

உலக சாதனை புத்தகத்தில் இந்திய சிறுவன்

1 mins read
ca4e6100-de18-4ad2-ac6b-2c1dcbc47cfd
-

பெங்களூரு: அதிக நினைவாற்றல், கோள்களை வரைதல், இணைய விளையாட்டுகளை உருவாக்குதல், கணினி 'கிராஃபிக்ஸ்' வடிவமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெங்களூருவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான்.

ஸ்ரீவிஜய், வசந்தி தம்பதியரின் மகனான தருண், இரண்டு வயதிலேயே விண்வெளி தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளான்.

மலேசியாவில் வசித்தபோது தனது மகன் அதிக நினைவாற்றல் கொண்ட குழந்தை என்ற விருதைப் பெற்றதாகக் கூறுகிறார் வசந்தி.

பின்னர், இதற்காக இந்திய சாதனை புத்தகத்திலும் தருணின் பெயர் இடம்பெற்றது. மகனின் திறமையை அறிந்த வசந்தி, தாம் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார். பிறகு மகனின் திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஐந்து வய­துக்­குள் அனைத்­து­லக விண்­வெ­ளிப் போட்­டி­யில் பங்­கேற்ற தரு­ணுக்கு 59வது இடம் கிடைத்­துள்­ளது. இதை­ய­டுத்து, விண்­வெ­ளிக் கோள்­கள் குறித்த எத்­த­கைய கேள்­விக்­கும் பதில் அளிப்­பது, கோள்­கள் தொடர்­பான படங்­களை வரை­வது ஆகி­யவை மூலம் அசத்தி வரு­கி­றான் இந்­தச் சிறு­வன்.

கணினி விளை­யாட்டை உரு­வாக்­கு­வ­து, 'கிரா­ஃபிக்ஸ்' தொழில்­நுட்­பத்தை திறம்­ப­டப் பயன்­ப­டுத்­து­தல் எனப் பல்­வேறு திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­ய­தற்­காக உலக சாதனை புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளான் தருண்.

தற்­போது செய­லி­களை உரு­வாக்­கு­வது, முப்­ப­ரி­மாண 'அனி­மே­ஷன்' ஆகி­ய­வற்­றில் கவ­னம் செலுத்தி வரும் சிறுவன் தரு­ணின் திறமையை அறிந்த இஸ்‌ரோ தலை­வர் சிவன் நேரில் அழைத்து பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.