காப்புறுதித் தொகைக்காக இறந்துவிட்டதாக போலி நாடகமாடிய வெளிநாடுவாழ் இந்தியர்

2 mins read
3a352664-7f6e-4363-946b-5a81f6159604
-

மும்பை: காப்­பு­று­தித் தொகை­யைப் பெற மன­நிலை சரி­யில்­லாத ஒரு­வ­ரைக் கொன்­று­விட்டு, தாமே இறந்­து­விட்­ட­து­போல் நாட­க­மா­டிய 54 வயது ஆட­வ­ரை­யும் அவ­ரின் கூட்­டா­ளி­கள் நால்­வ­ரை­யும் மகா­ராஷ்­டிர மாநி­லக் காவல்­து­றை­யி­னர் கைது­ செய்­த­னர்.

கடந்த 20 ஆண்­டு­க­ளாக அமெ­ரிக்­கா­வில் வசித்து வந்த பிர­பா­கர் வாக்­சோரே என்ற அந்த ஆட­வர், அங்கு ஒரு காப்­பு­றுதி நிறு­வ­னத்­தில் ஐந்து மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ருக்கு ஆயுள் காப்­பு­றுதி எடுத்­தி­ருந்­தார்.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் இந்­தியா திரும்­பிய பிர­பா­கர், அக­ம­து­நகர் மாவட்­டத்­தில் இருக்­கும் தம் மாம­னார் வீட்­டில் வசித்து வந்­தார். அமெ­ரிக்க நிறு­வ­னத்­தி­டம் இருந்து காப்­பு­று­திப் பணத்­தைப் பெற அவர் திட்­டம் தீட்­டி­னார். தமக்கு உடந்­தை­யாக வேறு நால்­வ­ரை­யும் சேர்த்­துக்­கொண்­ட­வர், அவர்­க­ளுக்­குப் பணம் தரு­வ­தா­க­வும் உறு­தி­ய­ளித்­தார்.

"பின்­னர் அரு­கி­லுள்ள ராஜூர் எனும் ஊரில் ஒரு வீட்டை வாட­கைக்கு எடுத்த பிர­பா­கர், அங்கு வசிக்­கத் தொடங்­கி­னார். அவ­ரும் அவ­ரின் நான்கு கூட்­டா­ளி­களும் ஒரு நச்­சுப் பாம்பை வாங்கி, அத­னைக் கொண்டு மன­நிலை சரி­யில்­லாத 50 வயது ஆட­வ­ரைத் தீண்டச் செய்­த­னர். அந்த ஆட­வர் இறந்­த­தும் உட­ன­டி­யாக அவரை ஒரு மருத்­து­வ­ ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். அவ­ரது பெயரை பிர­பா­கர் வாக்­சோரே எனப் பதி­வு­செய்­த­னர்," என்று விவ­ரித்­தார் அக­ம­து­ந­கர் காவல்­து­றைக் கண்­கா­ணிப்­பா­ளர் மனோஜ் பாட்­டீல்.

பாம்பு தீண்டி இறந்­த­வர் அமெ­ரிக்­கா­வில் இருந்து வந்து, தம் குடும்­பத்­தா­ரு­டன் ராஜூ­ரில் தங்­கி­யி­ருந்­தார் என்­றும் அதி­கா­ரி­க­ளி­டம் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

"பின்­னர் இறப்­புச் சான்­றி­த­ழை­யும் பிற சட்­ட­பூர்வ ஆவ­ணங்­க­ளை­யும் பெற்று, அவற்றை அமெ­ரிக்­கா­விற்கு அனுப்பி வைத்­த­னர். அங்­கி­ருந்த பிர­பா­க­ரின் மகன் காப்­பு­று­தித் தொகை கோரி விண்­ணப்­பித்­தார். இத­னி­டையே, இந்­தி­யா­வில் பிர­பா­க­ரும் அவ­ரின் கூட்­டா­ளி­களும் இறந்­த­வர்க்கு இறு­திச் சடங்­கு­க­ளைச் செய்­த­னர்," என்று பாட்­டீல் தெரி­வித்­தார்.

ஆனால், பிர­பா­கர் ஏற்­கெ­னவே ஏமாற்ற முயன்­ற­தால் அமெ­ரிக்­கக் காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு ஐயம் எழுந்­தது.

அத­னால், பிர­பா­க­ரின் மர­ணத்தை உறு­தி­செய்ய இந்­தி­யா­விற்கு அது புல­னாய்­வா­ளர்­களை அனுப்­பி­யது. பிர­பா­கர் உயி­ரு­டன் இருப்­பது தெரி­ய­வர, உட­ன­டி­யாக அவர்­கள் காவல்­து­றையை அணு­கி­னர். காவல்­துறை விசா­ர­ணை­யில் பிர­பா­க­ரின் சதி அம்­ப­ல­மா­னது.