பெகாசஸ் உளவுப் புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு

பெகாசஸ் உளவுப் புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு

2 mins read
3ed4b57b-1808-4624-a746-6fdadf54d60a
-

உச்ச நீதிமன்றம்: தேசிய பாதுகாப்பு எனக்கூறி மத்திய அரசு தப்பிக்க முடியாது

புது­டெல்லி: பெகா­சஸ் மென்­பொ­ருள் வழி­யாக நாட்­டின் முக்­கி­யத் தலை­வர்­கள், செய்­தி­யா­ளர்­கள், நீதி­ப­தி­கள் ஆகி­யோ­ரின் கைத்­தொலை­பே­சி­ ஒட்­டுக் கேட்­கப்­பட்ட விவ­கா­ரம் குறித்த புகாரை விசா­ரிக்க சிறப்பு வல்­லு­நர் குழு விசா­ரணை நடத்த வேண்­டும் என்று உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இஸ்­ரே­லின் என்­எஸ்ஓ அமைப்­பின் பெகா­சஸ் உளவு மென்­பொருள் மூலம் இந்­தியா­வில் முன்­னூ­றுக்­கும் மேற்­பட்­டோ­ரின் தொலை­பேசி உரை­யா­டல்­கள் ஒட்­டுக் கேட்­கப்­பட்­ட­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

இது குறித்து வி­சா­ரிக்க நாடா­ளு­மன்­றக் கூட்டுக் கூட்­டத்தை அமைக்­கும்­படி கோரி, நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­கள் அம­ளி­யில் ஈடு­பட்­டன. இத­னால், கடந்த மழைக்­கால கூட்­டத் தொடர் முழு­வ­தும் முடங்­கி­யது.

இந்த ஒட்­டுக் கேட்பு விவ­கா­ரம் தொடர்­பாக தொட­ரப்­பட்ட வழக்­கு­களை விசா­ரித்த உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி என்.வி.ரமணா, நீதி­ப­தி­கள் சூர்­ய­காந்த், ஹிமா கோலி அமர்வு, நேற்று இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. அதில், பெகா­சஸ் விவ­கா­ரத்­தில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் அதி­முக்­கி­ய­மா­னவை.

வழக்கை விசா­ரித்த நீதி­ப­தி­கள், "மக்­க­ளின் உரை­யா­டல்­கள் ஒட்­டுக்­கேட்­கப்­ப­டு­வது என்­பது அவர்­க­ளின் தனி­ம­னித உரி­மைக்குப் பங்­கம் விளை­விப்­ப­தா­கும். அத­னால் அவர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

"தொழில்­நுட்ப வளர்ச்சி முக்­கி­ய­மான ஒன்­று­தான். அதைப்­போ­லவே தனி­ம­னித உரிமை மிக முக்­கி­ய­மா­னது.

"நாட்டு மக்­க­ளின் ரக­சி­யத்தை காப்­பது முக்­கி­யம்.

"வழக்குத் தொடர்ந்த மனு­தா­ரர்­களில் சிலர் கைத்­தொ­லை­பேசி உரை­யா­டல் ஒட்­டுக்­கேட்­கப்­பட்­ட­தால் அவர்­கள் நேர­டி­யா­கவே பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"தீவி­ர­வா­தத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் குடி­மக்­க­ளின் அந்­த­ரங்க உரி­மைக்கு வயது வரம்பு விதிக்க முடி­யும்.

"அந்­த­ரங்க உரி­மைக்கு விதிக்­கப்­படும் கட்­டுப்­பா­டு­கள் அர­சி­யல் சட்­டம் அளித்­துள்ள உரி­மை­களை மீறு­வ­தாக இருக்­கக் கூடாது," என்று நீதி­ப­தி­கள் கூறி­னார்.

மேலும், "ஒட்­டுக்­கேட்பு விவ­கா­ரத்­தில் நட­வ­டிக்கை எடுப்­ப­தில் ஒன்­றிய அர­சுக்கு போதிய அவ­கா­சம் அளித்­தது உச்­ச­நீ­தி­மன்­றம்.கைத்­தொ­லை­பேசி உரை­யா­டல்­கள் ஒட்­டு­க்கேட்­கப்­பட்­டதை ஒன்­றிய அரசு திட்­ட­வட்­ட­மாக மறுக்­க­வில்லை. ஒவ்­வொரு முறை­யும் தேசிய பாது­காப்பு எனக்­கூறி அர­சாங்­கம் தப்­பிக்­கவோ, தங்­கள் செயலை நியா­யப்­ப­டுத்­தவோ முடி­யாது," என்று கூறிய நீதி­ப­தி­கள் இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரணை மேற்­கொள்ள மூன்று பேர் கொண்ட சிறப்பு வல்­லு­நர் குழு ஒன்றை நிய­மித்து உத்­த­ர­விட்­ட­னர்.

முன்­னாள் உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி ரவீந்­தி­ரன் தலை­மை­யில் 3 பல்­துறை நிபு­ணர்­கள் கொண்ட குழு விசா­ரணை நடத்­தும்.

இணைய குற்­றத் தடுப்­பில் நிபு­ணத்­து­வம் பெற்ற முன்­னாள் உள­வுத்­துறை தலை­வர் அலோக் ஜோஷி, இணைய பாது­காப்பு மற்­றும் மின்­னி­யல் தட­ய­வி­யல் வல்­லு­நராக நவீன் குமார் சவுத்ரி, தொழில்­நுட்ப வல்­லு­நர் சந்­தீப் ஓப­ராய் ஆகி­யோர் குழு­வில் இடம்­பெற்­றுள்­ளனர். சிறப்­புக் குழு­வின் விசா­ர­ணையை உச்­ச­நீ­தி­மன்­றம் நேர­டி­யா­கக் கண்­கா­ணிக்­கும். விசா­ரணை குறித்த அறிக்­கையை எட்டு வாரங்­களில் தாக்­கல் செய்­யு­மாறு நீதி­பதி­கள் உத்­த­ர­விட்­ட­னர். வழக்கை நீதி­ப­தி­கள் ஒத்தி வைப்­ப­தாக அறி­வித்­த­னர்.