மும்பை: இந்தியாவில் அதிகமாகத் தடுப்பூசி போட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.
இதுவரை அங்கு மூன்று கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில முதல்வரின் அலுவலகம் நேற்று தெரிவித்தது.
இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இன்று மகாரஷ்டிர மாநிலம், நாட்டிலேயே அதிகபட்சமாக மூன்று கோடி மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி ஒரு புதிய மைல்கல்லை தாண்டியுள்ளது.
"இது நம்முடைய சுகாதார அமைப்புக்கு ஒரு மாபெரும் சாதனையாகும்.
நாம் 'முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடும்பங்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மராட்டியம்' என்னும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, இதுவரை 103 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, தயக்கம் காட்டும் மக்களைத் தடுப்பூசி போட வைப்பது சவால்மிக்கது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அம்மாநிலம் தடுப்பூசி செலுத்துவதில் இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மராட்டியத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தாலும், தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் மேலாகவே பதிவாகி வருகிறது. அங்கு நேற்று புதிதாக 1,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 22,981 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அங்கு அக்டோபர் 25 நிலவரப்படி இதுவரை (95 மில்லியன் பேர்) முதல் தவணை தடுப்பூசியும் 29 மில்லியன் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக
அதே காலக்கட்டத்தில் இதுவரை இந்தியாவில் ஒரு பில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 26 நிலவரப்படி 52.3 விழுக்காட்டினர் (1.03 பில்லியன்) முதல் தவணை தடுப்பூசியும் 22.4 விழுக்காட்டினர் (310 மில்லியன் பேர்) இரு தவணைத் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். இந்தியாவிலே மகாராஷ்டிராதான் தொற்றால் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலம். இங்கு இரண்டு நாட்களுக்கு முந்தைய நிலவரப்படி, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.6 மில்லியன் பேர்.
அதற்கடுத்த நிலையில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 74,752 தொற்றுப் பாதிப்பும், 2,257 தொற்று மரணங்களும் பதிவாகியுள்ளன.