'பாஜக, ஆர்எஸ்எஸ் பொய் பிரசாரங்களை முறியடிக்க காங்கிரசுக்குப் பயிற்சி தேவை'

'பாஜக, ஆர்எஸ்எஸ் பொய் பிரசாரங்களை முறியடிக்க காங்கிரசுக்குப் பயிற்சி தேவை'

2 mins read
859fecef-10f3-4aaf-aef6-a8226d701d0a
-

புது­டெல்லி: உத்­தர பிர­தே­சம், பஞ்­சாப் உள்­ளிட்ட ஐந்து மாநி­லங்­களில் அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்தி தலை­மை­யில் டெல்­லி­யில் நேற்று ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது.

இதில் ராகுல், பிரி­யங்கா, மாநில காங்­கி­ரஸ் தலை­வர்­கள், பொதுச்­செ­ய­லா­ளர்­கள் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர். இக்­கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு பேசிய சோனியா காந்தி, காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளி­டம் ஒற்­றுமை இல்லை என்று அக்­கட்­சி­யின் தலை­வர் சோனியா காந்தி வருத்­தம் தெரி­வித்­துள்­ளார்.

பார­திய ஜனதா கட்சி, ஆர்­எஸ்­எஸ் அமைப்பு ஆகி­ய­வற்­றின் பொய் பிர­சா­ரங்­களை முறி­ய­டிக்க வேண்­டும். அவர்­க­ளுக்­குப் பதி­லடி கொடுக்க வேண்­டு­மெ­னில் நம் கட்­சிக்­கா­ரர்­க­ளுக்­குச் சிறப்­புப் பயிற்சி அளிக்­கப்­பட வேண்­டும்.

நாடு எதிர்­கொண்­டி­ருக்­கும் பிரச்­சி­னை­கள் குறித்து கட்­சி­யின் தலைமை நாள்­தோ­றும் அறிக்­கை­களை வெளி­யிட்டு வரு­கிறது. இருப்­பி­னும் இந்த அறிக்­கை­கள் யாவும் கடை­நி­லைத் தொண்­டர்­க­ளைச் சென்­ற­டை­கி­றதா என்­பது கேள்­விக்­கு­றி­தான்.

காங்­கி­ர­சின் மூத்த தலை­வர்­க­ளி­டம் முத­லில் ஒற்­றுமை என்­பது இல்­லவே இல்லை என்­பதை என்­னால் தெளி­வாக உணர முடி­கிறது.

காங்­கி­ர­சின் உய­ரிய கொள்­கை­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும்.

கடந்த காலங்­களில் அநீதி, சமத்­து­வ­மின்­மைக்கு எதி­ராக போராடி காங்­கி­ரஸ் வெற்றி பெற்­றி­ருக்­கிறது. இதை முன்­னு­தா­ர­ண­மா­கக் கொண்டு போராட வேண்­டும்.

நாட்­டின் அர­ச­மைப்­புச் சாச­னங்­களை நரேந்­திர மோடி அரசு படிப்­ப­டி­யாக அழித்து வரு­கிறது.

இத­னால் ஜன­நா­ய­கம் கேள்­விக்­கு­றி­யாகி வரு­கிறது. மத்­திய அர­சின் தவ­றான கொள்­கை­க­ளால் விவ­சா­யி­கள், விவ­சாய தொழி­லா­ளர்­கள் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு இழந்து தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. சிறு, நடுத்­தர தொழில்­கள் நலி­வ­டைந்து வரு­கின்­றன. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் போராட வேண்­டும். அடுத்த சில மாதங்­களில் ஐந்து மாநி­லங்­க­ளின் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது.

இதற்கு காங்­கி­ரஸ் தலை­வர்­களும் தொண்­டர்­களும் இப்­போதே தங்­க­ளைத் தயார் செய்ய வேண்­டும்.