30 லட்சம் பேருக்கு பேரழிவு ஏற்படும்: கேரளா எச்சரிக்கை

30 லட்சம் பேருக்கு பேரழிவு ஏற்படும்: கேரளா எச்சரிக்கை

1 mins read
7a4159f6-1af7-41ce-b7cd-efe1cdc07af0
-

புது­டெல்லி: முல்­லைப் பெரி­யாறு அணை பாது­காப்­பாக இருப்­ப­தால் நீர்­மட்­டத்­தில் எந்த மாற்­ற­மும் செய்ய தேவை­யில்லை என மத்­திய அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அணை­யின் நீர்­மட்­டம் 142 அடி­யாக இருக்­கும் பட்­சத்­தில் முப்­பது லட்­சம் மக்­க­ளுக்­குப் பேர­ழிவு ஏற்­படும் என கேரளா கூறி­யுள்­ளது.

126 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த அந்த அணை­யா­னது நில­ந­டுக்­கம் ஏற்­படும் வாய்ப்­புள்ள பகு­தி­யில் அமைந்­துள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்ள கேரள அரசு, அணை இன்­னும் பாது­காப்­பற்ற நிலை­யில்­தான் உள்­ளது என தெரி­வித்­துள்­ளது.

"முல்­லைப் பெரி­யாறு அணை­யின் நீர்­மட்­டத்தை 142 அடி­யாக உயர்த்த வேண்­டும் என்ற தமி­ழக அர­சின் முடிவு ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது. திடீ­ரென நீர்வரத்து அதி­க­மா­னால் ஆபத்து ஏற்­படும். எனவே நீர்மட்­டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்­டும்.

"அணை நீர்­மட்­டம் தற்­போது 137 அடி இருக்­கும் போது 2735 கன­அடி வரை­யி­லான நீரை தமிழ்­நாடு பயன்­ப­டுத்­த­லாம். ஆனால் தமிழ்­நாடு 2200 கன­அடி வரை மட்­டுமே பயன்­ப­டுத்­து­கிறது," என்று கேரள அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள மனு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அணை கட்­டப்­படும் போது பல அறி­வி­யல் பூர்­வ­மான விஷ­யங்­கள் கருத்­தில் கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் அணை கண்­கா­ணிப்புக் குழு­வும் தமிழ்­நாடு அர­சும் இதை கவ­னத்­தில் கொள்ள மறுப்­ப­தா­க­வும் கேரளா கூறி­யுள்­ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீடித்து வருகிறது.