நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யனுக்கு பிணை

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யனுக்கு பிணை

1 mins read
34cc886f-aeda-4cde-bec7-48e200c98c8c
-

மும்பை: போதைப் பொருள் வழக்­கில் சிக்­கி­யுள்ள நடி­கர் ஷாருக் கான் மகன் ஆர்­யன் கானுக்கு மும்பை உயர் நீதி­மன்­றம் பிணை வழங்­கி­யுள்­ளது.

ஏற்­கெ­னவே தாக்­கல் செய்­யப்­பட்ட இரண்டு பிணை மனுக்­கள் தள்­ளு­படி செய்­யப்­பட்ட நிலை­யில், ஆர்­யன் தாக்­கல் செய்த மூன்­றா­வது மனு மீது மூன்று நாள்­கள் விசா­ரணை நடை­பெற்­றது.

இந்த வழக்­கில் சிக்­கி­யுள்ள மேலும் இரு­வ­ரும் பிணை பெற்­றுள்­ள­னர்.

அர­சி­யல் மோத­லை­யும் ஏற்­ப­டுத்தி உள்ள இந்த வழக்­கின் முக்­கிய சாட்­சி­யா­கக் கரு­தப்­படும் கிரண் கோசாவி என்­ப­வர் புனே நக­ரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஆர்­யன் கானின் வழக்­க­றி­ஞர் ரோஹத்கி, வெள்­ளிக்­கி­ழமை பிணை உத்­த­ரவு கிடைக்­கும் என்­றும் சனிக்­கி­ழ­மைக்­குள் ஆர்­யன் கான் சிறை­யில் இருந்து வெளியே வரு­வார் என்­றும் தெரி­வித்­தார்.