மருந்துத் தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்தியா அழைப்பு

மருந்துத் தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்தியா அழைப்பு

1 mins read
53a6015f-9514-4403-8eed-e5d986b2922e
-

சென்னை: மருந்து உற்­பத்தி சார்ந்த தொழில்­களில் இந்­திய அரசு ஊக்­கு­விக்­கும் என மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

மருந்துத் தொழி­லின் மைய­மாக இந்­தி­யாவை மாற்ற அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­கள் முன்­வர வேண்­டும் என அவர் அழைப்பு விடுத்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மருந்து, மருத்­துவ சாதனத் தயா­ரிப்பு தொடர்­பான மாநாட்­டில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்­தி­யா­வில் மருந்து உற்­பத்தி தொழிற்­சா­லை­களைக் கட்­ட­மைக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு அனைத்து உத­வி­களும் அளிக்­கப்­படும் என்­றார்.

"முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய சொந்த நாடு­களில் இருப்­ப­தைப் போல் பாது­காப்­பான முத­லீட்டு சூழலை இந்­தி­யா­வும் வழங்­கும். நாட்­டில் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க தேவை­யான அனைத்து முயற்­சி­க­ளை­யும் மத்­திய அரசு மேற்­கொண்டு வரு­கிறது.

"இதைப் பயன்­ப­டுத்­திக் கொண்­டால் உலக மருந்து தொழில் நிறு­வ­னங்­கள் பல­ன­டை­ய­லாம்.

இந்­தி­யா­வில் அனைத்துத் தரப்பு முத­லீட்­டா­ளர்­களும் சம­மா­கவே நடத்­தப்­ப­டு­வர்," என்­றார் அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா.

உல­க­ளா­விய மருந்துத் தொழி­லின் மைய­மாக இந்­தியா இருக்க வேண்­டும் என்­பதே அர­சின் எண்­ணம் என்று குறிப்­பிட்ட அவர், நாட்­டின் வெவ்­வேறு பகு­தி­களில் மருத்­துவ - மருந்து ஆய்­வுப் பூங்­காங்­கள் அமைக்­கப்­படும் என்­றார்.