12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியின் விலை முடிவானது

புது­டெல்லி: 12 வய­துக்கு மேற்­பட்ட வர்க­ளுக்­கான தடுப்­பூ­சித் திட்­டம் விரை­வில் தொடங்­கப்­படும் என மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் தடுப்­பூ­சிக்­கான விலை முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

நாடு முழு­வ­தும் தடுப்­பூசி போடும் திட்­டம் தீவி­ர­மாக செயல்­படுத்­தப்­பட்டு வரு­கிறது.

18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கோவி­ஷீல்ட், கோவேக்­சின் ஆகிய தடுப்­பூ­சி­கள் போடப்­படும் நிலை­யில், குழந்­தை­க­ளுக்­கும் தடுப்­பூசி போட வேண்­டும் எனும் கோரிக்கை வலுத்து வந்­தது.

இந்­நி­லை­யில், 'ஸைகோவ்-டி' தடுப்பு மருந்தை 12 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு செலுத்த மத்­திய அரசு அனு­மதி வழங்கி உள்­ளது.

மத்­திய மருந்து ஒழுங்­கு­முறை ஆணை­யம் இம்­ம­ருந்து தொடர்­பான அனைத்து தர­வு­க­ளை­யும் பரி­சீ­லித்த பின்­னர் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டுக்­கான ஒப்­பு­தலை அண்­மை­யில் வழங்­கி­யது.

இதை­ய­டுத்து, இத்­த­டுப்­பூ­சி­யின் விலை குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வந்­தது. கோவேக்­சின், கோவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­களை விட, ஸைகோவ்-டி தடுப்பு மருந்­தின் விலை சற்று அதி­க­மாக இருக்­கும் என்று குறிப்­பிட்­டுள்ள சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா, தயா­ரிப்­பா­ளர்­கள் குறிப்­பிட்ட விலை­யை­விட குறை­வா­கவே நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளார்.

ஸைகோவ்-டி தடுப்பு மருந்து மூன்று கட்­டங்­க­ளாக போடப்­படும். புற்­று­நோய், சுவா­சக் கோளாறு, நரம்­பியல், இத­யப் பிரச்­சினை, கல்­லீ­ரல் பாதிப்­புள்ள சிறார்­க­ளுக்கு தடுப்பு மருந்து அளிப்­ப­தில் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதுவே இந்­தி­யா­வில் குழந்­தை­க­ளுக்­கான முதல் கொரோனா தடுப்பு மருந்­தா­கும்.

இதற்­கி­டையே, நாடு முழு­வ­தும் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் சுமார் 77 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொரோனா முதல் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

32 விழுக்­காட்­டி­னர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக அவர் டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனி­னும், முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் சுமார் நூறு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் பல்­வேறு கார­ணங்­க­ளால் இரண்­டா­வது ஊசி­யைப் போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று அவர் கவலை தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக மேலும் 9,445 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. மேலும், 93 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

அம்­மா­நி­லத்­தில் இது­வரை 41 கர்ப்­பி­ணி­கள் தொற்று பாதிப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், பெங்­க­ளூ­ரில் கொரோ­னா­வின் 'ஏ.ஒய்-4.2' வகை திரி­பால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 7ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதை­ய­டுத்து மாநில சுகா­தார அமைச்­சர் கே.சுதா­கர், அதி­கா­ரி­க­ளு­டன் தீவிர ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

தொற்­றுப்­ப­ர­வல் மீண்­டும் அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில், பெங்­க­ளூ­ரில் மீண்­டும் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட வாய்ப்­புள்­ள­தாக சமூக வலைத்­த­ளங்­கள் வழி தக­வல் பர­வி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!