புதுடெல்லி: இந்தியா அதன் சீன எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. அண்மையில் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய நவீன ஆயுதங்கள் அந்தப் படையினரிடம் காணப்பட்டதாக புளூம்பெர்க் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
சர்சைக்குரிய இமாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியை உரிமை கொண்டாடுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பூசல் நீடிக்கிறது. நாட்டின் வடகிழக்கில் பூட்டான், திபெத் அருகே உள்ள தவாங் பீடபூமி தான் சர்ச்சைக்குரிய நிலப் பகுதி. அதனருகில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதி தனக்குரியது என்று சீனா உரிமை கோரி வருவதால் சர்ச்சை நீடிக்கிறது.
எந்த நேரத்திலும் எதனையும் சமாளிக்கும் விதத்தில் இந்தியா நிறுத்தி இருக்கும் படையினரிடம் நவீன ரக துப்பாக்கிகள் உள்ளன. அவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சினூக் ஹெலிகாப்டரையும் இந்தியப் படையினர் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இவற்றுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ஏவு
கணை தாங்கி கப்பல், புத்தம் புதிய தொழில்நுட்பத்துடனான கண்காணிப்புக் கருவிகள் போன்றவையும் கிழக்கு திபெத் எல்லைப் பகுதியில் காணப்படுகின்றன.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தற்காப்பு உறவு வலுவடைந்து வருகிறது.

