தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட 248 கலைப்பொருள்கள் ஒப்படைப்பு

1 mins read
e27b4eea-72e6-4735-ab77-2cda110ce8b7
-

புது­டெல்லி: பல்­வேறு கால­கட்­டங்­களில் கொள்­ளைக் கும்­ப­லால் திருடி, கடத்தி விற்­பனை செய்­யப்­பட்ட ஏரா­ள­மான கலைப்­பொ­ருள்­களை அமெ­ரிக்கா இந்­திய அர­சாங்­கத்­தி­டம் திருப்பி ஒப்­ப­டைத்­துள்­ளது. அந்த கலைப்­பொ­ருள்

­க­ளின் மதிப்பு ரூ.112.21 கோடி ($15 மில்­லி­யன்).

வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற கலைப்­பொ­ருள் ஒப்­ப­டைக்­கும் நிகழ்­வில் இந்­தி­யத் துணைத் தூதா் ரண்தீா் ஜெய்ஸ்­வால், அமெ­ரிக்க உள்­நாட்டு பாது­காப்பு விசா­ர­ணைக் குழுப் பொறுப்­பாளா் எரிக் ரோசன்­பி­ளாட் ஆகியோா் கலந்­து­கொண்­டனா். 12ஆம் நூற்­றாண்­டைச் சோ்ந்த சிவ நட­ரா­ச­ரின் வெண்

­க­லச்­சிலை உள்­பட 248 கலைப்­பொ­ருள்­கள் இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.

இவற்­றில் 235 கலைப்­பொ­ருள்­கள், சட்­ட­வி­ரோத சிலை விற்­

ப­னை­யாளா் சுபாஷ் கபூ­ரி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்­டவை.

அவ­ரும் அவ­ரு­டைய கூட்­டா ளி­களும் இந்­தியா மட்­டு­மன்றி ஆப்­கா­னிஸ்­தான், கம்­போ­டியா, இந்­தோ­னீசியா, மியன்மார், நேப்பா­ளம், பாகிஸ்­தான், இலங்கை, தாய்­லாந்து உள்­ளிட்ட நாடு­களில் இருந்து சிலை­கள் மற்­றும் கலைப்­பொ­ருள்­களை கடத்தி வந்­துள்­ளனா். அந்த கலைப்­பொ­ருள்­கள், சுபாஷ் கபூ­ருக்­குச் சொந்­த­மான விற்­ப­னைக்கூடத்­தில் இருந்து வெவ்­வேறு நபா்க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டன.

அவா்க­ளைக் கண்­ட­றிந்து, விற்­பனை செய்­யப்­பட்ட அந்­தக் கலைப்­பொ­ருள்­களை அமெரிக்காவின் மன்­ஹட்­டன் மாவட்ட சிலைக் கடத்­தல் தடுப்­புப் பிரி­வினா் பறி­மு­தல் செய்­தனா். இது­வரை இல்­லாத அள­வில், அதிக கலைப்­

பொ­ருள்­களை இந்­தி­யா­வி­டம் அமெ­ரிக்கா இந்த முறை ஒப்­ப­டைத்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.