முல்லைப் பெரியாறு அணை திறப்பு

முல்லைப் பெரியாறு அணை திறப்பு

1 mins read
d015af20-98ed-4165-8118-dac475719613
-

இடுக்கி: முல்­லைப் பெரி­யாறு நீர்ப்­பி­டிப்பு பகு­தி­களில் பெய்து வரும் கன­ம­ழை­யால் அணை­யின் நீர்­மட்­டம் 138 அடியை எட்டி உள்­ளது. அத­னைத் தொடர்ந்து அந்த அணை வெள்­ளிக்­கி­ழமை திறக்­கப்­படும் என கேரள அரசு அறி­வித்­தி­ருந்­தது.

அதன்­படி நேற்­றுக் காலை 7 மணி­ய­ள­வில் கேரள நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் ரோஷி அகஸ்­டின் மற்­றும் கேரள வரு­வாய்த்­துறை அமைச்­சர் ராஜன் ஆகி­யோர் அணைக்குச் சென்று ஆய்வு செய்­த­னர். அணையைத் திறப்­ப­தற்கு முன்­னர் மேற்­கொள்­ளப்­பட்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் கேட்­ட­றிந்­த­னர். முன்­ன­தாக, 350 குடும்­பங்­களைச் சேர்ந்த 1,079 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு மாற்­றப்­பட்­ட­னர்.