ஆர்யன் கானுக்கு நிபந்தனை

ஆர்யன் கானுக்கு நிபந்தனை

1 mins read
e8117ffa-e49a-4f8a-929f-f1ed8b56a173
-

புது­டெல்லி: போதைப்­பொ­ருள் வழக்­கில் கைது செய்­யப்­பட்ட நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்­யன் கானுக்கு மும்பை உயர் நீதி­மன்­றம் பிணை வழங்­கி­யது.

அதற்­கான நிபந்­த­னை­கள் நேற்று அறி­விக்­கப்­பட்­டன. ஆர்­யன் கான் பிணை பெற ரூ.1 லட்­சம் மதிப்­பி­லான பத்­தி­ரம், அதே தொகைக்கு இணை­யாக ஒன்று மற்­றும் அதற்கு மேற்­பட்­ட­வர்­கள் பிணைத்­தொகை செலுத்த வேண்­டும்.

வழக்­கில் தொடர்­பு­டைய பிற குற்­ற­வா­ளி­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள முயற்­சிக்­கக்­கூ­டாது,

சிறப்பு நீதி­மன்­றத்­தில் பாஸ்­போர்ட்டை ஒப்­ப­டைக்க வேண்­டும். ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும் காலை 11 மணி­யி­லி­ருந்து பிற்­ப­கல் 2 மணிக்­குள் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரி­வின் மும்பை அலு­வ­ல­கத்­தில் கையெ­ழுத்­திட வேண்­டும் போன்­றவை ஆர்­யன் கானுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னை­கள்.