பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசியல் எதிர்காலத்தை முடிவுசெய்யும் இடைத்தேர்தல்

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் அரசியல் எதிர்காலத்தை முடிவுசெய்யும் இடைத்தேர்தல்

1 mins read
5c807b6c-f9d2-4af0-8999-d07e273b98bb
-

பாட்னா: பீகா­ரில் இன்று (அக்­டோ­பர் 30) நடை­பெ­ற­வுள்ள இடைத்தேர்தல் முக்­கி­ய­த்­து­வம் வாய்ந்­த­

தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. இத்­தேர்­த­லின் முடிவு அம்­மா­நி­லத் தலை­வர்­

க­ளான நிதிஷ்­ கு­மார் (படம்), தேஜஸ்வி பிர­சாத் யாதவ் போன்­றோ­ரின் அர­சி­யல் செல்­வாக்கை முடிவு செய்­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

பீகார் முதல்­வர் நிதிஷ்­ கு­மார் தலை­மை­யி­லான ஐக்­கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்­சி­யின் இரண்டு எம்­எல்­ஏக்­கள் மறை­வால் தாரா­பூர் மற்­றும் குஷேஸ்­வர் அஸ்­தான் சட்­ட­மன்­றத் தொகு­தி­களில் இன்று இடைத்­தேர்­தல் நடை­பெ­று­கிறது. இந்த இடைத்­தேர்­த­லில் தோல்வி ஏற்­பட்­டால் அது நிதிஷ்­கு­மா­ரின் எதிர்­கால அர­சி­ய­லில் பாதிப்பை உரு­வாக்­கும். இத­னால், நிதிஷ் நேர­டி­யா­கப் பிர­சா­ரக்­க­ளத்­தில் இறங்­கி­னார். இவ­ரது முக்­கி­யக் கூட்­ட­ணி­யான பாஜ­க­விற்­கும் இந்த இடைத்­தேர்­தல் கௌர­வப் பிரச்­சி­னை­யாக உள்­ளது. பீகார் மாநில முக்­கிய எதிர்த்­த­ரப்­புத் தலை­வ­ரான தேஜஸ்வி, இந்த இரு தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்று தனது செல்­வாக்கை மேலும் உயர்த்த விரும்­பு­கி­றார். எனவே இரு தொகு­தி­க­ளி­லும் தனது கட்­சி­யி­ன­ரையே அவர் நிறுத்தி உள்­ளார். மெகா கூட்­ட­ணி­யில் உள்ள காங்­கி­ரசை அவர் கலந்­து­பே­சா­மல் முடி­வெ­டுத்­ததால் அதி­லி­ருந்து காங்­கி­ரஸ் வெளி­யே­றி­விட்­டது. இந்த இரு தொகு­தி­களில் ஒன்­றில் கடந்த முறை காங்­கி­ரஸ் போட்­டி­யிட்­டது.

243 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட சட்­ட­மன்­றத்­தில் இந்த மெகா கூட்­ட­ணிக்கு 110 இடங்­களும் ஆளும் தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணிக்கு 126 இடங்­களும் உள்­ளன. முதல்­வர் நிதி­ஷின் ஜேடியு வசம் 43 உறுப்­பி­னர்­களே உள்­ள­னர்.