மிர்ஸாபூர்: இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவனைப் பள்ளிக்கூடத்தில் தலைகீழாகத் தொங்க விட்ட நிகழ்வு பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூர் மாவட்டம், அஹ்ரௌரா நகரிலுள்ள ஓர் உயர் நிலைப்பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சோனு யாதவ் என்ற அந்த மாணவன் சாப்பிடும்போது குறும்புத்தனம் செய்ததால், பள்ளி முதல்வர் மனோஜ் விஸ்வகர்மா கோபமடைந்தார்.இதனையடுத்து, சோனுவின் ஒரு காலைப் பிடித்து, இரண்டாம் தளத்தில் இருந்து அவனைத் தலைகீழாகப் பிடித்துத் தொங்கவிட்டார். மற்ற மாணவர்களின் முன்னிலையில் அவனுக்குப் பாடம் கற்பிப்பதற்காக அவர் அப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது.
தலைகீழாக தொங்க விட்டு தண்டனை
1 mins read
-

