ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி

1 mins read
b8740896-602d-4b07-a16f-f24514b57f84
ஜி-20 நாடுகளின் தலைவர்கள் நேற்று குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது பிரதமர் மோடியும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனும் உரையாடினர். படம்: ஏஎஃப்பி -

வத்­தி­கன்: 'ஜி-20' உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்து கொள்­வ­தற்­காக இத்­தாலி சென்­றுள்ள பிர­த­மர் மோடி வத்­தி­க­னில் போப் பிரான்­சி­ஸைச் சந்­தித்­துப் பேசி­னார்.

இத்­தாலி தலை­ந­கர் ரோமில் இரண்டு நாள் ஜி-20 மாநாடு நேற்று தொடங்­கி­யது. இதில் சிறப்பு அழைப்­பா­ள­ராக பிர­த­மர் மோடி கலந்து கொண்டார்.

வெள்­ளிக்கிழமை காலை ரோம் நக­ர் வந்து சேர்ந்­த­தும் முதல் நிகழ்ச்­சி­யாக ஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர் சார்­லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்­பிய ஆணை­யத் தலை­வர் உர்­சுலா வான் டெர்­லெ­யன் ஆகி யோரை அவர் சந்­தித்­தார்.

அப்­போது இரு தரப்பு பொரு ளியல், சுற்­றுச் சூழல் பாது­காப்பு, கிரு­மித்தொற்று குறித்து அவர்­கள் விவா­தித்­த­னர்.

ஆப்­கா­னிஸ்­தான் நில­வ­ரம், சீனா­வின் செயல்­பா­டு­கள், இந்தோ பசி­பிக் வட்­டா­ரத்­தின் தற்­போ­தைய சூழ்நிலை உள்­ளிட்­டவை குறித்­தும் ஆலோ­சனை நடத்­தப்­பட்­டது.

பின்­னர் ரோம் நக­ரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அவர் மலர் தூவி மரி­யாதை செலுத்­தி­னார். 'ஜி-20' மாநாட்­டி­லும் பிர­த­மர் மோடி உரை­யாற்றுகிறார்.

பிரதமர் மோடியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சென்று உள்ளார்.