ஆர்யன் கான் 28 நாட்களுக்குப் பிறகு விடுவிப்பு

ஆர்யன் கான் 28 நாட்களுக்குப் பிறகு விடுவிப்பு

1 mins read
11a91203-f1f6-4c4d-9c5f-e08fdad47144
(இடம்) ஆர்யன் கான் விடுவிக்கப்படுவதை அறிந்து ஆர்தர் ரோடு சிறை வளாகத்துக்கு முன்பு கூடிய ஏராள மான ரசிகர்களை போலிசார் கலைக்க முயற்சி செய்தனர்.படம்: இபிஏ(மேல்) சிறையிலிருந்து வெளியே வந்த ஆர்யன் கான் காரில் ஏறி வீடு சென்றார். படம்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

மும்பை: போதைப் பொருள் வழக்கு விசா­ர­ணை­யில் மும்பை ஆர்­தர் ரோடு சிறை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல பாலி­வுட் நடி­கர் ஷாருக் கானின் மகன் ஆர்­யன் கான் 28 நாட்­க­ளுக்­குப் பிறகு நேற்று பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இதை­ய­டுத்து தந்தை ஷாருக் கானு­டன் அவர் தனது இல்­ல­மான மன்­னத்­திற்­குச் சென்­றார். அங்கு ஏரா­ள­மான ரசி­கர்­கள் மேள தாளங்­க­ளு­டன் வர­வேற்­ற­னர்.

அவ­ரு­டன் குற்­றம்­சாட்­டப்­பட்ட இரு­வ­ரும் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இம்­மா­தம் 3ஆம் தேதி மும்­பை­யி­லி­ருந்து கோவா சென்ற சொகுசு கப்­ப­லில் போதைப் பொருள் தடுப்­புப் பிரி­வி­னர் திடீர் சோதனை நடத்­தி­னர். அப்­போது போதைப் பொருள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறி ஆர்­யன் கான் உட்­பட எட்­டுப் ேபரை போலி­சார் கைது செய்­த­னர். விசா­ணைக்­குப் பின் அனை­வ­ரும் ஆர்­தர் ரோடு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

ஷாருக் கான் தனது மகனை விடு­விக்க பல்­வேறு முயற்­சி­களை எடுத்த வேளை­யில் அவர்­க­ளு­டைய பிணை மனு இரண்டு முறை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. பின்­னர் மும்பை உயர்­ நீ­தி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்டு இரண்டு நாட்­க­ளாக விசா­ரணை நடை­பெற்­றது. ஷாருக் ­கான் தரப்­பில் மூத்த வழக் ­க­றி­ஞர் முகுல் ரோத்­தகி முன்­னி­லை­யா­னார். இரு தரப்பு விவா­தங்­க­ளை­யும் கேட்ட மும்பை உயர் நீதி­மன்­றம் 14 நிபந்­த­னை­க­ளு­டன் அவர்களை பிணை­யில் விடு­விக்க வெள்­ளிக்­கி­ழமை உத்­த­ர­விட்­டது.

ஆனால் ஆவ­ணங்­கள் உரிய நேரத்­தில் சிறை அதிகாரிகளுக்கு வந்து சேரா­த­தால் வெள்­ளிக்­கி­ழமை இரவும் அவர் சிறை­யில் வைக்­கப்­பட்­டார். இந்­நி­லை­யில் ஆர்­யன் கான் நேற்று விடு­விக்­கப்­பட்­டார்.