புதுடெல்லி: தமிழக ஆளுநர் ரவி, இரண்டு முறை டெல்லி வந்து பிரதமர் உட்பட பல தலைவர்களைச் சந்தித்து விட்டார். ஆனால் ஆளுநர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர் முன்பு நாகாலாந்து ஆளுநராக இருந்தார். இதனால், இவருக்கு டெல்லியில் அரசு ஒரு வீடு ஒதுக்கியுள்ளது என்றும் டெல்லி வந்தால் அங்குதான் தங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. 'அழைத்தால் மட்டும் வந்தால் போதும்' என ஆளுநர் தரப்பிலிருந்து டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆளுநர், யாரை, எப்போது சந்திக்கிறார் என்ற விவரம் தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்குத் தெரியாது என்று தமிழகத் தகவல்கள் கூறுகின்றன.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்காத தமிழக ஆளுநர்
1 mins read
-

