உத்தரகாண்டில் சாலை விபத்து; 13 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்டில் சாலை விபத்து; 13 பேர் உயிரிழப்பு

1 mins read
85fc62e2-4e7a-4eca-bc07-67f2ca6c017a
-

டேரா­டூன்: உத்­த­ர­காண்­டின் டேரா­டூன் மாவட்­டத்­தில் சக்­ரதா வட்­டத்­தில் புல்­ஹாத்-பைலா சாலை­யில் ஏற்­பட்ட சாலை விபத்­தில் 13 பேர் உயி­ரி­ழந்து உள்­ள­னர். நான்கு பேர் காயம் அடைந்து உள்­ள­னர்.

இது­பற்றி தக­வல் அறிந்து போலி­சார் மற்­றும் மாநில பேரி­டர் மீட்புப் படை­யி­னர் ஆகி­யோ­ரு­டன் இணைந்து சக்­ரதா மாஜிஸ்­தி­ரேட்­டும் உடன் சென்­றுள்­ளார். தொடர்ந்து மீட்­புப் பணி­களும் நடந்து வரு­கின்­றன.

டேரா­டூன் மாவட்­டம் சக்­ரதா பகு­தி­யில் உள்ள விகாஸ்­ந­க­ருக்கு பைலா கிரா­மத்­தில் இருந்து சிறிய பேருந்து ஒன்று நேற்­றுக் காலை சென்­று­கொண்­டி­ருந்­த­போது, தியுதி என்­னும் இடத்­திற்கு அருகே, எதிர்­பா­ரா­த­வி­த­மாக கவிழ்ந்து பள்­ளத்­தாக்­கில் விழுந்­தது.

இதில் அந்த வாக­னத்­தில் இருந்த 13 பேர் பரி­தா­ப­மாக பலி­யா­யி­னர். நான்கு பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். விபத்து நடந்த இடத்­தில் உள்­ளூர் மக்­க­ளின் உத­வி­யு­டன் காவல்­து­றை­யி­னர், மாநில பேரி­டர் மீட்­புப் படை­யி­னர் ஆகி­யோர் மீட்­புப் பணி­களை மேற்­கொண்­ட­னர். காய­ம­டைந்தவர்­கள் அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.