அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசுக்குத் தடை

அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசுக்குத் தடை

1 mins read
a113eb2e-8367-42d3-855c-ebdf352cbf28
-

கவு­காத்தி: தீபா­வளி பண்­டிகை வரும் நவம்­பர் 4ஆம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளது. இதை அடுத்து மாநி­லங்­கள், கொரோனா கட்­டுப்­பாடு உள்­ளிட்ட பல்­வேறு கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றன. தமிழ் நாடு உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் பட்­டா­சு­களை குறிப்­பிட்ட நேரத்­திற்­குள் வெடித்­து­விட வேண்­டும் என்று கால நேரம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மேற்கு வங்­கம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் பட்­டா­சுக்கு முழு­மை­யா­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் அரி­யா­னா­வில் 14 மாவட்­டங்­களில் பட்­டாசு விற்­க­வும் வெடிக்­க­வும் தடை விதித்து அம்­மா­நில அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. அந்த மாவட்­டங்­கள் டெல்­லிக்கு அருகே உள்­ளன. பிவானி, சர்கி தத்ரி, பரி­தா­பாத், குரு­கி­ராம், ஜஜ்­ஜார், ஜிந்த், கர்­னல், மகேந்­தி­ர­கர்க், நுக், பல்­வல், பானி­பட், ரேவரி, ரோதக் மற்­றும் சோனி­பட் மாவட்­டங்­களில் பட்­டாசு வெடிக்­க­வும், விற்­பனை செய்­ய­வும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இணை­யம் மூலம் வாங்­கு­வ­தற்­கும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. திரு­மண நிகழ்ச்­சி­க­ளுக்­குப் பாரம்­ப­ரி­ய­மாக பயன்­ப­டுத்­தப்­படும் பசு­மைப் பட்­டா­சு­க­ளுக்கு மட்­டும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மாதம், டெல்­லி­யில் காற்­றின் தரம் மோச­மா­ன­தைத் தொடர்ந்து பட்­டா­சுக்கு அம்­மா­நி­லம் தடை­வி­தித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.