'வீடு தேடிச்சென்று தடுப்பூசி' திட்டம் துவக்கம்

1 mins read
10008d94-7a86-4f40-b73f-0157ae11f4f1
-

புது­டெல்லி: வீடு தேடிச்­சென்று தடுப்­பூசி போடும் 'ஹர் கர் தஸ்­தக்' திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

'ஒவ்­வொரு வீட்­டின் கத­வும் தட்­டப்­படும்' என்ற கரு­ப்பொ­ரு­ளில் செயல்­ப­டுத்­தப்­படும் இந்­தத் திட்­டத்­தின் மூலம் நாட்­டில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை மேலும் வேக­மெ­டுக்­கும் என நம்­பு­வ­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை மந்­த­க­தி­யில் மேற்­கொள்­ளும் மாவட்­டங்­களில் இந்­தப் புதிய திட்­டம் முழு வீச்­சில் செயல்­ப­டுத்­தப்­படும். இதன்மூலம் அந்த மாவட்­டங்­களில் உள்ள அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட வேண்­டும் என்­பதே மத்­திய அர­சின் இலக்கு என அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

மொத்த மக்­கள் தொகை­யில் 50 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் குறை­வாக தடுப்­பூசி போடப்­பட்­டுள்ள மாநி­லங்­களை முத­லில் குறி­வைத்­துள்­ளது மத்­திய சுகா­தார அமைச்சு.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக, இரண்­டா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம் உள்ள மாவட்­டங்­களில் கவ­னம் செலுத்­தக்­கூ­டும் எனத் தெரி­கிறது.

"அடுத்த ஒரு மாத காலத்­துக்கு இந்­தத் திட்­டம் தீவி­ர­மா­கச் செயல்­படுத்­தப்­படும். சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் வீடு வீடா­கச் சென்று தடுப்­பூசி குறித்த பிர­சா­ரத்தை மேற்­கொள்­வர். மேலும், முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு வீட்­டில் வைத்தே தடுப்­பூசி போடப்­படும்.

"இரண்­டா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது," என்று மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் நாட்­டில் புதி­தாக 10,423 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. இது கடந்த 259 நாள்­களில் பதி­வா­கிய ஆகக்­கு­றை­வான அன்­றாட எண்­ணிக்­கை­யா­கும். நேற்று முன்­தி­னம் 443 பேர் மாண்­டு­விட்­ட­னர்.