ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர உருவம்

2 mins read
25697bd8-e612-4c04-b8a9-91977334c4a8
-

புது­டெல்லி: கேதார்­நாத்­தில் ஆதி சங்­க­ராச்­சா­ரி­யா­ரின் 12 அடி உயரச் சிலையை நேற்று பிர­த­மர் மோடி திறந்­து­வைத்­தார்.

டெல்­லி­யி­லி­ருந்து அவர் நேற்று காலை தனி விமா­னம் மூலம் உத்த­ர ­காண்ட் சென்­றார்.

அங்­கி­ருந்து அவர் கேதார்­நாத் புறப்­பட்­டார். டேரா­டூன் விமான நிலை­யத்­தில் பிர­த­மர் நரேந்­திர மோடியை அம்­மா­நில ஆளு­நர் குர்­மித் சிங் மற்­றும் மாநில முதல்­வர் புஷ்­கர் சிங் தாமி வர­வேற்­ற­னர்.

இதை­ய­டுத்து பிர­த­மர் நரேந்­திர மோடி, கேதார்­நாத் சிவன் கோவி­லில் தீபா­ரா­தனை செய்து வழி­பட்­டார். அதன் பிறகு 12 அடி உயர ஆதி சங்­க­ராச்­சா­ரி­யா­ரின் உரு­வச் சிலையை அவர் திறந்து வைத்­தார். மேலும் புதுப்­பிக்­கப்­பட்ட சமாதி ஸ்த­லத்­தை­யும் திறந்து வைத்­தார்.

கேதார்­நாத்­தில் ரூ.130 கோடி செல­வி­லான பல்­வேறு உள்­கட்­ட­மைப்புத் திட்­டங்­க­ளை­யும் பிர­த­மர் மோடி தொடங்கி வைத்­த­தாக புதிய தலை­முறை தெரி­வித்­தது.

பின்­னர் மக்­க­ளிை­டயே அவர் உரை­யாற்­றி­னார்.

"சமு­தாய நன்­மைக்­காக ஆதி­சங்­க­ரர் புதிய குறிக்­கோ­ளு­டன் செயல்­பட்­டார். சமஸ்­கி­ரு­தத்­தில் உள்ள வேதங்­களை வரும் தலை­மு­றை­யி­ன­ருக்கு நாம் கொண்டு செல்ல வேண்­டும். தீர்த்த யாத்­திரை மூலம் நமது கலாச்­சா­ரங்­களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்­கிறது. யாத்­தி­ரை­யின் வாயி­லாக கிடைப்­பது மகிழ்ச்சி மட்­டும் அல்ல பாரம்­ப­ரி­ய­மும்தான். கேதார்­நாத் ஜோதிலிங்­கத்தை வாழ்­நா­ளில் ஒரு­மு­றை­யா­வது தரி­சிக்க வேண்­டும். அயோத்­தி­யா­வில் ராம­ரு­டைய கோவில் பிரம்­மாண்­ட­மாக கட்­டப்­பட்டு வரு­கிறது. அயோத்­தி­யா­வுக்கு இந்த கௌர­வம் நூறு ஆண்­டு ­க­ளுக்­குப் பிறகு கிடைத்­துள்­ளது. அதே நேரத்­தில் ஆதி சங்­க­ர­ரின் எண்­ணங்­கள் நமக்கு உத்­வே­கத்தை அளிக்­கிறது. 2013 அழி­வுக்­குப் பிறகு கேதார்­நாத்தை மீண்­டும் உரு­வாக்க முடி­யுமா என்று மக்­கள் நினைத்­தார்­கள். ஆனால் கேதார்­நாத் மீண்­டும் தற்­போது புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு தலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புத்த கயா உள்ளிட்ட ஆன்மீகத் தலங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. அதேபோல் இந்தியாவின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது," என்று பிரதமர் மோடி கூறினார்.