கடவுச்சீட்டு உறைக்குப் பதிலாக உண்மையான கடவுச்சீட்டு வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

கடவுச்சீட்டு உறைக்குப் பதிலாக உண்மையான கடவுச்சீட்டு வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

1 mins read
21f81c8d-666e-44c2-9d90-c52904a15627
திரையை விலக்கி சங்கராச்சாரியார் உருவச் சிலையை திறந்துவைக்கும் பிரதமர் மோடி. படம்: ஏஎன்ஐ இணையம். -

வய­நாடு: கேரள மாநில வய­நாடு மாவட்­டத்­தில் உள்ள கனி­யம்­பேட்டா எனும் பகு­தி­யைச் சேர்ந்த மிதுன் பாபு என்­ப­வர் கடந்த மாதம் 30ஆம் ேததி கட­வுச்­சீட்­டுக்கு உறை ஒன்றை இணை­யம் வழி­யாக வாங்கி­யி­ருக்­கி­றார்.

ஆனால் வீட்­டுக்கு வந்த பொட்­ட­லத்­தைப் பிரித்­துப் பார்த்­தால் அதில் கட­வுச்சீட்டு உறை­யு­டன் ஒரு உண்­மை­யான கட­வுச்­சீட்­டும் இருந்­துள்­ளது. இத­னால் மிதுன் பாபு அதிர்ச்சி அ­ய­டைந்­துள்­ளார்.

உட­ன­டி­யாக அமே­சா­னின் வாடிக்­கை­யா­ளர் சேவைப் பிரி­வி­னரை தொடர்புகொண்ட மிதுன் பாபு, கடவுச்சீட்டு உறையு­டன் உண்­மை­யான கடவுச்சீட்டு வந்­தது குறித்து தெரி­யப்­ப­டுத்­தி­னார்.

ஆனால் வாடிக்­கை­யா­ளர் சேவைப் பிரி­வி­னர், உங்­க­ளுக்கு நேர்ந்­தது போல மீண்­டும் ஒரு முறை நடக்­காது.

இது தொடர்­பாக விற்­ப­னை­யா­ள­ரி­டம் தெரி­யப்­ப­டுத்தி கவ­ன­மாக இருக்­கு­மாறு தெரிவிப்பதாகக் கூறி வைத்­துவிட்டனர்.

கட­வுச்சீட்­டில் இருந்த தக­வ­லின்­படி, அது திருச்­சூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த முக­மது சாலிஹ் என்­ப­வ­ரின் கட­வுச்­சீட்டு என்­பதை கண்டறிந்த மிதுன், சிர­மப்­பட்டு முக­மது சாலிஹை தொடர்பு கொண்டு அவ­ரது கடவுச்­சீட்டு தன்­னி­டம் இருப்­பதை தெரி­யப் ­படுத்­தி­யி­ருக்­கி­றார். இத­னால் மிதுன், விரை­வில் கடவுச்சீட்டை முக­ம­து­வி­டம் ஒப்­ப­டைக்­க­வி­ருக் ­கி­றர். கட­வுச்­சீட்டு எப்­படி உறைக்­குப் பதி­லாக வந்­தது என்று மிதுன் உட்­பட பல­ருக்­கும் புரி­ய­வில்லை.

மிது­னுக்கு வந்த உறையை முத­லில் முக­மது சாலேஹ் வாங்­கி­யி­ருக்க வேண்­டும்.

அதனை கட­வுச்­சீட்­டு­டன் பொருத்­திப் பார்த்த பின்­னர் பிடிக்­கா­த­தால் கட­வுச்­சீட்டை எடுக்­கா­மல் அவர் திருப்­பி­ய­னுப்­பி­ருக்­க­லாம்.

விற்­ப­னை­யா­ள­ரும் கவ­னிக்­கா­மல் அந்த உறையை அப்­ப­டியே மதன் பாவுக்கு அனுப்­பி­யி­ருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.