மருத்துவமனையில் தீ: 10 கொரோனா நோயாளிகள் பலி

மும்பை: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் மருத்­து­வ­மனை ஒன்­றில் நேற்று காலை மூண்ட தீயில் கொரோனா நோயா­ளி­கள் 10 பேர் கருகி மாண்­டு­விட்­ட­னர்.

அந்த மாநி­லத்­தின் அக­மத்­ந­கர் மாவட்­டத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் முற்­ப­கல் 11 மணி­யள­வில் திடீ­ரென தீப்­பற்­றி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த சிகிச்சை அறை­வில் 17 நோயா­ளி­கள் இருந்­த­தா­க­வும் அவர்­களில் 10 பேர் மாண்­டு­விட்­ட­தாக வும் மாவட்ட ஆட்­சித் தலை­வர் ராஜேந்­திர பேஸ்லே செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

தீப்­பி­டித்­த­தற்கு மின்­க­சிவு கார­ண­மாக இருக்­க­லாம் என்று முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­த­தாக அவர் கூறி­னார்.

இருப்­பி­னும் முழு­மை­யான விசா­ர­ணைக்கு மாநில முதல்­வர் உத்­தவ் தாக்­கரே உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அலட்­சி­யம் கார­ண­மாக இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தி­ருக்­கி­றதா என்று விசா­ரிக்­கு­மா­றும் தீப்­பி­டித்­தற்­கான உண்­மை­யான கார­ணத்­தைக் கண்­ட­றி­யு­மா­றும் அதி­கா­ரி­களை அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தீப்­பி­டித்து எரிந்த ஒரு மணி நேரத்­தில் தீ முற்­றாக அணைக்­கப்­பட்டுவிட்­ட­தாக தீய­ணைப்­புப் படை கூறி­யது.

உயி­ரி­ழந்­தோ­ரில் ஒரு­வர் தவிர மற்­ற­வர்­கள் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள். மாண்ட 10 பேரில் ஆறு பேர் ஆண்­கள். தீக்­கா­ய­ம­டைந்த ஏழு நோயா­ளி­களில் ஒரு­வ­ரின் நிலை கவ­லைக்­கி­டமாக உள்­ள­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன. ஒருவரைத் தவிர மற்ற ஒன்பது பேரும் அடையாளம் காணப்பட்டுவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!