தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'விளக்குகளை அணைத்து எண்ணெய் எடுத்த மக்கள்'

1 mins read
713efdb0-f9b3-43f3-b6a5-dec72e93a2a6
-

அயோத்தி: அயோத்­தி­யில் தீபா­வளி­யை­யொட்டி ஏற்­றப்­பட்ட விளக்­கு­க­ளி­லிருந்து மக்­கள் எண்­ணெய்யை வழித்து எடுத்­துச் சென்­றுள்­ள­னர். அதைக் காட்­டும் காணொ­ளிகள் சமூ­க­ வ­லைத்­தளங்­களில் வெளி­யாகி பாஜக அரசைக் குறைகூறி வருகின்றன.

அயோத்தி­யில் ராமர் கோயில் கட்­டப்­பட்டு வரு­ம் நிலையில் பாஜக ஆளும் அந்த மாநில அரசு தீபா­வளி அன்று அயோத்­திக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளித்து பண்­டி­கை­யைச் சிறப்­பா­கக் கொண்­டாடி வரு­கிறது.

கடந்த ஆண்டு தீபங்­களை ஏற்றுவதில் முதன்­மு­றை­யாக உலக சாத­னை­யும் படைக்­கப்­பட்­டது. இந்த ஆண்டு முன்பைவிட அதி­க­மாக சுமார் 12 லட்­சம் தீபங்­கள் ஏற்­றப்­பட்­டன.

இவ்­வி­ளக்­கு­கள், வட மாநி­லங்­களில் சமை­ய­லுக்கு அதி­கம் பயன்­ப­டுத்­தும் கடுகு எண்­ணெ­யில் ஏற்­றப்­ப­டு­கின்­றன.

இத­னால், அயோத்­தி­வா­சி­கள் திரண்டு எரி­யும் விளக்­கு­களை அணைத்து, அதி­லி­ருந்து கடுகு எண்­ணெய்யை வீட்­டிற்கு எடுத்துச் சென்­றி­ருப்­ப­தைக் காட்­டும் காணொ­ளி­கள் சமூ­க­ வ­லைத்­தளங்­களில் பர­ப­ரப்­பாகி உள்­ளன.

அவை மத்­திய, மாநில அர­சு­கள் மீது கடும் குறை­கூ­று­ப­வை­யாக உள்­ள­தாக ஊடகங்­கள் தெரி ­வித்­தன.